எனக்கு மிகவும் வேண்டப்பட்ட புத்தகங்களில் ஒன்றாக இருப்பது திரு ஆ. சிதம்பரகுற்றாலம் அவர்களின் 'உள்ளது நாற்பது'. "84 பக்கங்கள், விலை : மதிப்பிட முடியாதது" என்று குறிப்பிட்டிருக்கிறது என்னிடமுள்ள 2011ஆம் ஆண்டு பதிப்பில். என் தந்தை கோவையில் ஒரு கோயிலுக்குச் சென்றிருந்தபோது அங்கே எவரோ ஒருவர் இந்தப் புத்தகத்தின் சில பிரதிகளை அடுக்கி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். இந்த காலத்தில்கூட இப்படியும் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அள்ளிவிட்டார்கள் நம் மக்கள்.
ரமணர் இயற்றிய 'உள்ளது நாற்பது' என்ற நூலின் நாற்பது வெண்பாக்களுக்கு மிக எளிய, எவரும் புரிந்துகொள்ளக்கூடிய உரை. உபநிடதங்கள், திருக்குறள், பத்திரகிரியார் மெய்ஞானப் புலம்பல், தாயுமானவர், குகை நமசிவாயர், செங்கோட்டை ஆவுடையக்காள் பாடல்கள், ஒழிவில் ஒடுக்கம், ரிபு கீதை, அவதூத கீதை, அஷ்டவக்ர கீதை, சிவகீதை, விவேகசூடாமணி, யோக வாசிட்டம் மற்றும் திருமந்திரம் ஆகிய நூல்களிலிருந்து தகுந்த மேற்கோள்களுடன் ரமணரின் பாடல்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.
ரமணர் இயற்றிய 'உள்ளது நாற்பது' என்ற நூலின் நாற்பது வெண்பாக்களுக்கு மிக எளிய, எவரும் புரிந்துகொள்ளக்கூடிய உரை. உபநிடதங்கள், திருக்குறள், பத்திரகிரியார் மெய்ஞானப் புலம்பல், தாயுமானவர், குகை நமசிவாயர், செங்கோட்டை ஆவுடையக்காள் பாடல்கள், ஒழிவில் ஒடுக்கம், ரிபு கீதை, அவதூத கீதை, அஷ்டவக்ர கீதை, சிவகீதை, விவேகசூடாமணி, யோக வாசிட்டம் மற்றும் திருமந்திரம் ஆகிய நூல்களிலிருந்து தகுந்த மேற்கோள்களுடன் ரமணரின் பாடல்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.
