கன்னட சாகித்ய அகாடமி விருது பெற்ற கேடம்பாடி ஜட்டப்பராய் எழுதிய இந்நூலை,
”சுமார் நூறாண்டுகளுக்கு முன்னால் இருந்த இந்திய சமூகத்தின் ஒரு பிரிவினரின் நிலைமையை அன்றைய சமூகத்தின் நம்பிக்கைகள், சடங்குகள், உணவுப்பழக்கங்கள், வேட்டைக்கான சட்டங்கள், ஆங்கிலேய எஜமானர்களுக்கும் உள்நாட்டுக் குடிகளுக்கும் இடையே நிலவிய உறவுகள் என அனைத்தையும் சித்தரிக்கிறது”என்ற அறிமுகத்துடன் என் மகளுக்காகவே ஒரு குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். வாசிக்கத் தொடங்கியதும் இந்நூல் என்னை முழுமையாக இழுத்துக் கொண்டது எனலாம். மலைகள் காடுகள் விலங்குகள் என அது தனி உலகமாக நம்மை மாற்றிவிடுகிறது.
“இப்புத்தகத்தில் நான் விவரிக்கப்போகும் நிகழ்ச்சிகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் நடந்தவை. இன்று வனவிலங்குகளைப் பாதுகாப்பது நமது கடமையாகும். பண்டைய காலங்களில் மலைப்பிரதேச விவசாயிகளின் பயிர்களையும் கிராமத்தினரையும் காக்கும் பொருட்டு வன விலங்குகள் வேட்டையாடப்பட்டன.என்று இதன் முகவுரையில் திரு. ராய் குறிப்பிடுகிறார். அது உண்மை. மலைகளும் காடுகளும் விலங்குகளும் நிறைந்த காலத்திற்கு நம்மை இழுத்துச்செல்கிறது இந்நூல். வேட்டையின் நுணுக்கங்களும் பயணங்களும் நிறைந்த சாகசக்கதைகள் என்றாலும் இவை கூறப்பட்ட விதத்திலேயே இலக்கியமாகின்றன. கி. ராஜநாராயணனின் எழுத்துடன் தமிழில் இவரது எழுத்துகளை ஒப்பிடலாம். அத்தகைய அந்தரங்க மகிழ்வினை உணர்த்தக்கூடியவை ராவின் வேட்டை அனுபவங்கள்.
தற்கால நவநாகரீக உலகிலிருந்து, எழிலமிகு இயற்கைச் சூழலுக்கு, உங்களை அழைத்துச் செல்கிறேன்,“