A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

2 Nov 2017

மண்புழுக்களின் தேசத்திலிருந்து எழுந்த ராஜநாகம்

தமிழ் புலம்பெயர் எழுத்துக்களை இரண்டாக வகைப்படுத்தலாம், தன் அடையாளங்களை கடந்து வேறொன்றாகும் முயற்சி, அதன் சிக்கல்கள் என்பது ஒரு வகை, தன் அடையாளத்தை இறுகப் பேணி தற்காத்துக்கொள்ளப் போராடுவது மற்றொரு வகை. முந்தைய எழுத்திற்கு மிகச்சிறந்த பிரதிநிதி அ. முத்துலிங்கம். இரண்டாம் போக்கை பிரதிநிதிப்படுத்தும் எழுத்தே மிகக் குறைவு. தெளிவத்தை ஜோசப்பை முன்னோடியாக கொண்டால், சீ. முத்துசாமி இவ்வரிசையில் அவருக்கு அடுத்த இடத்தை அடைபவர். 
Image result for மண்புழுக்கள் முத்துசாமி

2006 ஆம் ஆண்டு மலேசியாவில் நிகழ்ந்த நாவல் போட்டியில் முதற்பரிசு வென்ற நாவல் இது. முத்துசாமி 1970 களிலிருந்தே எழுதி வந்தாலும், ஏறத்தாழ இருபது வருடங்கள் இடைவெளிக்கு பிறகு எழுதிய நாவல். இவ்வகையிலும் கூட தெளிவத்தையுடன் ஒப்புமை உள்ளவரே. அவரும் சில ஆண்டுகள் எழுதாமல் மீண்டும் எழுத வந்தார். 

10 Sept 2014

கோவேறு கழுதைகள் - இமையத்தின் சுமையேற்றும் எழுத்து

சிறப்பு பதிவர் -த.கண்ணன்

அய்ன் ராண்ட எழுதிய ‘Atlas Shrugged’, பல இளைஞர்களின் ஆதர்ச நூலாக இருந்தது; இருப்பது. முதலாளிகளும், அறிவு ஜீவிகளுமே உலகத்தையும் அதன் சுமையையும் சுமப்பது போன்ற ஒரு சித்திரத்தை அளித்த நாவல் அது. அதற்கு முற்றிலும் எதிரான ஒரு சித்திரத்தை வரைகிறது இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’. சமூகத்தின் அடிநிலை மக்களின் முதுகில் ஒய்யாரமாய் அமர்ந்தே இந்தச் சமூகம் தன் சுகமான பயணத்தை மேற்கொள்கிறது. பலசமயங்களில் சுமையென்று கருதாமலே அவர்கள் இயல்பாகச் சுமக்கவும் செய்கிறார்கள்..

கோவேறு கழுதைகள்
இமயத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’  (1994) இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு Beasts of Bruden  என்ற தலைப்பில் வெளியாயிருக்கிறது.

கோவேறு கழுதைகள் தலித் இலக்கியம் என்ற வகைமைகளுக்குள்ளெல்லாம் அடைபடாமல், என் பார்வையில், ஒரு மகத்தான இலக்கிய நூலாக மிளிர்கிறது

7 Sept 2013

தற்செயல்களின் ரசவாதம்


முற்றலும் புதிய ஒரு பாதையில், பார்த்துப் பழகியிராத மனிதர்களுடன் பேருந்தில் பயணிக்கும்போது, திடீர் என்று இந்த இடத்தையும் இந்த மனிதர்களையும் நாம் இதற்கு முன் பார்த்த மாதிரியும் பழகிய மாதிரியும் உங்களில் எவருக்கேனும் தோன்றியிருக்கிறதா? அது மட்டுமல்லாமல் இன்ன இடத்தில் ஒரு வேகத்தடையோ பள்ளமோ இருந்து, முன்பு எப்போதோ கடைசி சீட்டில் அமர்ந்திருக்கும்போது எகிறியடித்து புடறி வலித்த அனுபவம் நினைவுக்கு வந்து, சுதாரிப்புடன் அமரும் அந்தக் கணத்தில் உண்மையிலேயே அங்கு ஒரு வேகத்தடை வந்தால் மனம் கொள்ளும் பரபரப்பு இருக்கிறதல்லவா- . யுவனின் சிறுகதைகளை வாசித்த அனுபவத்தை இப்படித்தான் விளங்கிக்கொள்ள முடியும். யுவனின் கவிதைகள் மீது கொஞ்சம் அறிமுகம் உண்டு என்றாலும் அவருடைய  சிறுகதைகளை வாசிப்பது இதுவே முதல்முறை. உண்மையில் அபாரமான வாசிப்பனுபத்தை அளித்தது.



19 Jul 2013

தமிழ்நாட்டில் காந்தி - தி.செ.சௌ.ராஜன்

  
பதிவர் - கடலூர் சீனு 


தமிழில் இப்போது காந்தியை அறிந்து கொள்ளச் செறிவான பல நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன . தவறவிடக்கூடாத  நூல்களென லூயி ஃபிஷெர்  எழுதிய 'நான் கண்ட காந்தி'  [தமிழில் தி.ஜ.ரா., சித்தக்கடல் பதிப்பகம்],  'காந்தியின் இறுதி 200 நாட்கள்' [பாரதி புத்தகாலயம்] ஆகியவற்றை குறிப்பிடலாம். முந்திய நூல் காந்தி எனும் பேராற்றலின் வாழ்வை நமக்கு அண்மையாக்கும்.  பிந்தையது சமூக வாழ்வெனும் அறிய இயலா பெரும்புதிர்முன் தனது ஆத்மீக நம்பிக்கைகள் சிதறி, சரிவின் இருட்குகைக்குள் சென்று மறையும் மகாத்மாவைப் பின்தொடரும்.

காந்தி குறித்து தமிழில் இனி எத்தனை நூல்கள் வந்தாலும் அவற்றுடன் தவறாமல் இணைத்து வாசிக்கப்பட வேண்டிய நூல் தி.செ.சௌ. ராஜன் எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி''. 1934, பிப்ரவரி 23 முதல் மார்ச் 22 வரை தமிழ்நாட்டில் ஒருமாத காலம் சுற்றுப்பயணம் செய்து 120 மேடைகள் வழியே தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அதனுடன் ஹரிஜன சேவா நிதி, பிஹார் நிலநடுக்க நிதி சேகரித்தார் காந்தி. காந்தியின் மேடை உரைகளுக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு அவருடன் பயணித்த ராஜன், காந்தியின் தமிழக பயணத்தைப் பற்றி எழுதிய குறிப்புகள் அடங்கியதே இந்நூல்.                                                                                                                                                                                                                                                   
தமிழ்நாட்டில் காந்தி
1934ஆம் ஆண்டில் ஹரிஜன இயகத்திற்காக மகாத்மா காந்தி மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயண நிகழ்வுகளின் தொகுப்பு இந்நூல்.
பதினெட்டு நாட்களில் இரண்டாயிரம் மைல் பயணம்...
112இடங்களில் காந்தியைக் காணக் குவிந்த இரண்டு கோடி தமிழர்கள். சென்ற இடங்களில் எல்லாம் வரவேற்பும் பணமுடிப்பும் அன்பும் ஆரவாரமும்... இவற்றை பதிவு செய்துள்ளது தி.சே.சௌ.ராஜன் காந்தியின் தமிழகச் சொற்பொழிவுகளை உடனிருந்து மொழிபெயர்த்தவர்.
தி.சே.சௌ.ராஜன், சந்தியா பதிப்பகம்                                            

20 Jun 2013

ஐரோப்பிய சிந்தனையாளர்கள் - எழுத்தின் தேடுதல் வேட்டை - நாகரத்தினம் கிருஷ்ணா

முன்னர் ஒரு விவாதத்தில் என்னுடன் விவாதித்த நண்பர் ஒருவர் வரிசையாகப் பல மேற்குலக சிந்தையாளர்களின் தத்துவங்களை பொளந்து கட்டிக்கொண்டிருந்தார். இணையத்தில் கொஞ்சம் நோண்டினால் கிடைக்கக்கூடிய பல விவரங்களை வரிசையாகச் சொல்வது பெரிய விஷயம் அல்ல என்பதால் விவாதத்தில் இருந்தவர்கள் பெரிதும் ஆச்சர்யப்படவில்லை. கொஞ்ச நேரத்தில் விவாதம் திசையறியாமல் சென்றபோது அவர் வார்த்தை விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்தார். அதற்குக் காரணமும் நண்பரிடம் இருந்தது. நமது சிந்தனைகள் எதுவும் மொழியியல் வரலாறு பற்றிய அறிமுகமில்லாதவர்களை சென்றடைய முடியாது என்றார். வெறும் பெயர் உதிர்ப்புகளாக அல்லாமல் மிக விரிவாக ஒரு சிந்தனைத்தளத்தைத் தொடரும் போது தவிர்க்க இயலாதபடி நாம் மொழியியலின் அடிப்படைகளோடு சண்டை போட்டுக்கொண்டிருப்போம் என்றார். அவரது வாதத்தில் உண்மை இருந்தாலும், கட்டுடைப்பு என சில வாதங்களை மொழி அடிப்படைகளை மட்டும் கொண்டு தகர்க்க முடியும் எனும் நம்பிக்கை எங்களுக்கு வரவில்லை.
 
நாகரத்தினம் கிருஷ்ணாவின் `எழுத்தின் தேடுதல் வேட்டை` கட்டுரைத் தொகுப்பைப் படிக்கும் போது நண்பர் கூறியது சரிதானோ எனும் எண்ணம் மேலோங்கியது. ஒரு குறிப்பிட்ட மொழியில் ஒரு காலகட்டத்தில் மிகத் தீவிரமான சிந்தனைகள் வெளிப்படும்போது, அப்போது புழங்கிய மொழி வளங்களை நாம் கணக்கில் கொள்ளாமல் இருக்க முடியாது. பண்டைய இந்தியாவின் சமஸ்கிருத மொழி ஆகட்டும், கடந்த நூற்றாண்டின் பிரெஞ்சு மொழியியல் ஆய்வாளர்கள் முன்மொழிந்த சிந்தனைகள் ஆகட்டும் இந்த கூற்றை ஊர்ஜிதம் செய்வது போலுள்ளன. தீவிரம் கூடாத படைப்புகள் வெளிவரும் மொழியில் அமைந்திருக்கும் சிந்தனைத்தளமும் மிகவும் மேலோட்டமாக மட்டுமே இருக்க முடியும். மொகலாய ஆட்சியிலும், ஆங்கிலேய ஆட்சியிலும் நம் மொழியில் வெளியான படைப்புகளை சங்க இலக்கியங்களோடும் , பக்திகாலகட்ட இலக்கியங்களோடும் ஒப்பிட முடியாது அல்லவா?

13 Jun 2013

நாடகத்தமிழ் - பம்மல் சம்பந்த முதலியார்

அது ஒரு முடிவுறாத மதிய நேரம். முந்தைய நாள் வரை அலைந்ததில் உடல் களைப்பைத் தாண்டி எழுந்துகொள்ள முடியாத அசதியில் ஆய்ந்திருந்தேன். விழித்திருந்தேனா தூக்கத்தில் கனவு காண்கிறேனா என அறிய முடியாத நிலை. அவ்விதம் கிடப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். முழுவதும் விழிக்க முடியாமல் காலையா மாலையா எனத் தெரியாத நிலை. அரைவிழிப்பில் எதிரே ஓடிக்கொண்டிருந்த டிவியைப் பார்த்தேன். ஷேக்‌ஸ்பியரைப் பற்றி ஒரு ஆவணப்படம். ஷேக்ஸ்பியர் என உண்மையில் யாராவது இருந்தார்களா? அடிதடிக்குப் பெயர் போன மார்லோ எனும் நாடக ஆசிரியர் தான் ஷேக்ஸ்பியர் எனும் பெயரில் எழுதினாரா என மிக விரைப்பாக டை கட்டிய ஆசாமி பேசிக்கொண்டிருந்தார். நான் மீண்டும் தூக்கத்துக்குப் போனேன்.
1965இல் சினிமா மோகம்  தலைவிரித்தாடியபோது நாடகத்துக்காக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை செலவழித்த பம்மல் சம்பந்தம் முதலியார் தனது நெருக்கமான உறவினரிடம் ஒரு நாடகத்தை சொல்லிக்கொண்டிருந்தார். கண்பார்வை மங்கிய முதலியார் நாடகக் காட்சிகளையும், நடிகர்களின் முகபாவங்களையும், மேடை அமைப்பையும், வசனங்களையும் சொல்லச் சொல்ல அந்த நபர் எழுதி வந்தார். மரப்பாவை போல சொற்பாவை அமைத்தவர் நாடகத்தை நவீனமயமாக்கியது மட்டுமல்லாது, நாடகத்தமிழ் எனும் இயலை மீட்டெடுத்து பல நூல்களை வெளியிட்டவர்.



20 May 2013

ஒட்டகம் கேட்ட இசை - பாவண்ணன்

'எவரை எங்ஙனம் சமைத்தற்கு என்னமோ அங்ஙனம் சமைப்பாய்' - என பராசக்தியிடம் பாரதி முறையிட்டதைப் பற்றிய ஒரு முன்னுரைக் குறிப்பு பாவண்ணன் எழுதிய `ஒட்டகம் கேட்ட இசை` கட்டுரைத் தொகுப்பை வாங்கத் தூண்டியது. `அதனை அவன்கண் விடல்` என்பது போல் ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அனுபவங்களின் கூட்டுத்தொகைதான் ஒட்டுமொத்த மனிதனின் ஆளுமை எனச் சொன்னால் தவறில்லை. அனுபவங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்தத் தொகுப்புக்கு பாரதியின் வரிகளைவிட சிறப்பானத் தொடக்கம் இருக்காது.

 
 
அனுபவங்களே படைப்பின் ஊற்றுக்கண். கலை நோக்கு அந்த ஊற்றுக்கண்ணைக் கீறிவிடும் கருவி. ஒரு படைப்பு தீவிரமாக வாசிக்கப்படும்போது புதுய அனுபவங்களை வழங்குவதுபோலவே படைப்பூக்கத்துடன் எதிர்கொள்ளப்படும் ஒரு அனுபவம் புதிய தரிசனங்களையும் புதிய படைப்புகளுக்கான விதைகளையும் வழங்குகிறது. படைப்பாளியாகவும் விமர்சகராகவும் செயல்பட்டுவரும் பாவண்ணன் தனது அனுபவங்களைப் படைப்பூக்கத்துடன் எதிர்கொண்டதன் தடையங்களை இந்த நூலில் காணலாம்.
 
எழுத்துக்கும் வாசிப்புக்கும் தேவையான அனுபவங்கள் நம்மைச் சுற்றி விரவிக்கிடக்கின்றன - எல்லா படைப்பாளிகளும் சொல்லும் வசனம். ஆனால் அனுபவங்களை படைப்பூக்கமாக மாற்றும் கலையைத் தெரிந்தவர்கள் மிகச் சிலரே. கொஞ்சம் சுரணையும், அளவுக்கதிகமான பொறுமையும், உழைப்பும், நடைமுறைப்பார்வையும் ஒருசேர அமையும்போது நல்ல படைப்பு உருவாகிறது. ஆனால், மாபெரும் கதையாக மாறும் அனுபவங்கள் சிறு ஜன்னலைப் போன்றவை. அதைத் திறந்து பார்க்கும்போது காணக்கிடைக்காத அற்புதங்களும், யதார்த்தமே பிரம்மாண்டப் புனைவாக மாறியதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
 
திப்புவின் கண்கள் - எனும் கட்டுரை ஸ்ரீரங்கப்பட்டணத்தில் வீரத்தையும் துணிச்சலையும் பறைசாற்றிய திப்புவின் திடலில் பாவண்ணனுக்குக் கிடைக்கும் அனுபவம். பெரும் அழிவுகளையும், சாவுகளையும் எதிர்கொண்ட இடத்தில் ஒரு ஓவியத்தின் மூலம் திப்புவின் கண்களை சந்திக்கிறார் ஆசிரியர். கண்களே மனதின் வாசல் என்பதுபோல, காலம்காலமாக ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்ளும் சிரிப்புகள், கோபங்கள், கருணை, காதல், மயக்கம், சீற்றம் எல்லாமே இரு கண்கள் வழியே படம்படமாகத் தெரிந்துவிடும் மாயம் தான் என்ன? இதை அனைத்தையும் மீறி ஓவியர் பிடிக்க வேண்டிய கணத்தை நம் முன்னே நிறுத்தப்பார்க்கிறார். காலம் காலமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் நினைவில் பதியவேண்டிய உருவம் - திப்பு என்றவுடன் சட்டென நினைவு வரவேண்டிய கண்களைப் படம் பிடிப்பதுதான் ஓவியரின் வெற்றி. திப்புவின் மன ஆழத்தில் உறைந்திருந்த அந்த வேட்கையை அந்த ஓவியனும் உணர்ந்துகொண்டதை பாவண்ணன் பேரனுபவமாக நினைக்கிறார்.
 
குருவிமடம் - என்றொரு கட்டுரை இத்தொகுப்பில் மிகச் சிறப்பான கட்டுரை. தொலைபேசித் தொடர்புக்கான கட்டுமான வளர்ச்சிக்காக பல ஊர்களுக்குப் பயணம் செய்யும் வேலை ஆசிரியருக்கு. சிக்கமகளூருக்கு அருகில் ஒரு கோபுரத்தை முடுக்குவதற்காக பயணம் செய்கிறார். பழுதுபார்க்கும் வேலை தொடங்கிய பிறகு அங்கு வேலை செய்ய வந்த மஞ்சுநாத் என்பவரோடு பேசத்தொடங்குகிறார். காடு பற்றி பல சுவாரஸ்யமானத் தகவல்களை மஞ்சுநாத் தரத்தொடங்க, ஆசிரியருக்கு பேச்சு மிக சுவாரஸ்யமாகத் தோன்றுகிறது.மணிக்கணக்கில் பறந்துவந்த பிறகு ஒரு கிலையில் எல்லா குருவிகளும் சேர்ந்திருக்கும். அதை குருவிமடம் எனக் குறிப்பிடுகிறார் பஞ்சுநாத். குவெம்புவின் கவிதைகளைப் பற்றி பேசத்தொடங்க, மஞ்சுநாத்தைப் பற்றி பல சுவாரஸ்யங்கள் வெளிவருகின்றன. ஒரு விதத்தில் எழுத்தாளர் சந்திக்கும் மனிதர்களும், அனுபவங்களும் குருவி மடம் போன்றதுதான். விதவிதமான மனிதர்கள், பெயரே தெரியாமல் பழகிச் செல்லும் உறவுகள் என வாழ்வே ஒரு குருவிமடம்.
 
சிற்பம், ஓவியம், கவிதை என வெவ்வேறு வடிவங்களைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரை மிக ய்தார்த்தமான ஒன்று. தோற்றத்தின் அடிப்படையில் சிற்பவம் வடிவம் சார்ந்ததும், ஓவியம் கற்பனை சார்ந்ததும், கவிதை மொழி சார்ந்ததும் போலத் தோன்றினாலும் உண்மையில் அனைத்துமே மனம் சார்ந்து இயங்கும் தன்மை கொண்டவை தான். கலைஞனின் மனம் காட்சிகளால் நிறைந்த ஒரு மாபெரும் தொகுப்பு. அதை அவன் எப்படி உள்வாங்குகிறான் என்பதிதான் கலைஞனின் மொழி ரூபம் வெளிப்படுகிறது. ஓவியம், சிற்பம் மட்டுமல்ல ஒவ்வொரு வார்த்தைகளும் கூட பெரும் பண்பாட்டின் பின்புலத்தில் இயங்குகிறது. இதை முன்வைத்து ஹம்பி நகரில் கண்ட ஓவியத்தைப் பற்றி அற்புதமான கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர். கவிதையாகவும் ஓவியமாகவும் சிற்பமாகவும் புதிரின் தருணங்கள் மீண்டும் மீண்டும் மனிதகுலத்தின் முன் படைக்கப்படுகின்றன.
 
ஒட்டகம் கேட்ட இசை - பாடல்கள் வழியே பாவண்ணன் எனும் படைப்பாளியை அறிந்துகொள்ளும் முயற்சி. சிறு வயதில் பாடல் கேசட்டுகள் வழியே அவருக்குள் உருவான இசை உணர்வுகளை மிகத் துல்லியமாகப் படம் பிடித்துள்ளார். அருணா சாய்ராம், மகாராஜபுரம் சந்தானம், ஜெயஸ்ரீ, சஞ்சய் சுப்ரமணியம் என பலரது பாடல்களை கேட்ட அனுபவங்கள் இக்கட்டுரையில் உள்ளன. இசை கேட்டு மனபாரத்தைக் குறைத்துக்கொள்ளும் அனுபவத்தை மிக அழகாகக் காட்டியுள்ளார். சிலருக்கும் இசை ஒரு மருந்து, சிலருக்கு உள்ளம் உவக்கும் வாழ்க்கை.
 
எல்லா எழுத்தாளர்களும் தாங்கள் சந்தித்த மனிதர்கள், படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள் பற்றி நிறைய எழுதியுள்ளனர். வெறும் செய்திகளாக எழுதுவதைக் காட்டிலும் மனிதர்களை ரத்தமும் சதையுமாக நம்முன் நிறுத்துவதை மிகச் சில எழுத்தாளர்கள் மட்டுமே செய்கிறார்கள். பாவண்ணன் இவ்விஷயத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பாவண்ணன் பேட்டி
 
ஆசிரியர் - பாவண்ணன்
 
தலைப்பு - ஒட்டகம் கேட்ட இசை
 
இணையத்தில் வாங்க - ஒட்டகம் கேட்ட இசை.
 

8 May 2013

The Valmiki Syndrome - Ashok K. Banker

The Valmiki Syndrome
ஆசிரியர் : Ashok K. Banker
பக்கங்கள்: 278
விலை: ரூ.250
Random House Publishers

***


வால்மீகி பெயரைப் பார்த்ததும் இது இராமாயணக் கதையோ என்றுதான் நினைத்து எடுத்தேன். ஆனால் அப்படி இல்லை. Work Life Balance என்று சொல்லக்கூடிய, வேலை செய்யும் அனைவரும் சந்திக்கும் ஒரு முக்கியப் பிரச்னையைப் பற்றிய புத்தகம் என்று தெரிந்தது. ஆங்கிலம் என்றாலும், தட்டித் தடவி படித்திடலாம்(!!) என்றெண்ணி எடுத்துப் படித்துவிட்டேன்.

தான் ஒரு குரு இல்லை, இது ஒரு சுயமுன்னேற்றப் புத்தகம் இல்லை, இதைப் படித்து நீங்கள் திருந்தவும் போவதில்லை, சும்மா படிங்க. பின்னர் உங்கள் தன்னம்பிக்கை மற்றும் முயற்சியிலேயேதான் Work Life Balanceஐ எட்டுவீர்கள் என்று முன்னுரையில் மிகவும் விரிவாகச் சொல்லிவிடுகிறார் ஆசிரியர். ஏன் அவ்வளவு பெரிய பீடிகைன்னு தெரியல. இருந்தாலும் ஒருமுறை புத்தகத்தை படிக்கலாம் என்று எண்ணி, இதை படித்து முடித்தேன்.

7 May 2013

ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் – ஜெயகாந்தன்

கல்கி, தேவன், சேத்தன் பகத், ஹாரி பாட்டர் எனும் வட்டத்தில் புழங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நவீன தமிழ் இலக்கிய உலகை அறிமுகம் செய்த நண்பன் அவன். இணையத்தில் அவன் புழங்குவதில்லை என்றாலும் சிற்றிதழ் வட்டத்தில் முனைப்புடன் இயங்கிக்கொண்டு தானிருக்கிறான். நீண்ட நாட்களுக்கு பிறகு அண்மையில் அவனை நண்பனின் திருமணத்தில் சந்திக்க நேர்ந்தது. ஏதேதோ இலக்கிய அரட்டைகள் என சுகமாக கழிந்துக்கொண்டிருந்த எங்கள் உரையாடல் மெல்ல காந்தியை பற்றியும் அண்மைய காலத்து அரசியல் நிகழ்வுகள் பற்றியும் திரும்பியது. சில நிகழ்வுகளில் எனது அரசியல் நிலைப்பாடை தெளிவு படுத்த வேண்டும் என்று கோரினான் ஒவ்வொரு விஷயத்திலும் நான் ஒரு நிலைபாட்டை எடுத்துத்தான் ஆக வேண்டுமா? ..இது சார்ந்து நான் எந்தவொரு நிலைப்பாடையும் எடுக்கவில்லை..நான் எழுதுவதும் வாசிப்பதும் உண்மையில் எனக்கொரு ஆன்மீக அனுபவம் அவ்வளவே..அரசியல் சர்ச்சைகளை பற்றி அதிகம் அலட்டிகொள்வதில்லை’ என்றேன். ‘ காந்தியின் பெயரை சொல்லிக்கொண்டு திரிகிறாயே தவிர அவரின் நேர்மை உன்னிடம் இல்லை’ என்று கோபமாக சொல்லிவிட்டு அகன்று சென்றான். அவன் சென்றபிறகு யோசித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் எனக்கு நேர்மை இல்லையா? சிந்தனைகள் சுழற்றியடித்தன. வேறு பலரைப்போல் நானும் காந்தியின் பிம்பத்து நிழலில், ஒளிபுகாத இருளில் என் அகத்தை மறைத்து வைக்கிறேனா? கொஞ்சம் சுய விமர்சனங்களுக்கு பின்னர் இறுதியாக இப்படியொரு முடிவுக்கு வந்தேன், காந்தியின் அளவுக்கு இல்லையென்றாலும், ஓரளவு நேர்மை இருக்கவே செய்கிறது. ஆனால் காந்திக்கு இருந்த துணிவில் கால் பங்கு கூட எனக்கில்லை.
 



3 May 2013

கணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா

சுஜாதாவுக்குத் தன் அபார மேதைமையைக் காட்ட வேண்டும் என்ற நோக்கம் கிடையாது.வாசகருடைய ஆர்வத்தைத் தூண்ட வேண்டும், மீதியை அவராகவே தேடிப் படித்துக்கொள்வார்என்பது அவர் கொள்கை. - .முத்துலிங்கம்
 
உலக இலக்கியத்தின் வெற்றிகரமான சிறுகதைகளாக நமக்குக் கிடைக்கும் கதைகளில் எவற்றுக்கும் குறையாத பத்து கதைகளையேனும் சுஜாதா எழுதியுள்ளார் - ஜெயமோகன்
 
எண்பதுகளின் துவக்கத்தில் சுஜாதாவைப் படிக்கத் துவங்கிய நாட்களில் அவர் தான் நண்பர்களுக்கு வாத்தியார். எது தொடர்பான சந்தேகம் உண்டானாலும் வாத்தியார் ஏதாவது எழுதியிருப்பார் பாரேன் என்று உடனே சுஜாதாவின் புத்தகத்தைத் தேடி ஒடுவார்கள். அநேகமாக எழுதியிருப்பார். அல்லது எழுதிக் கொண்டிருப்பார்.  - எஸ்.ராமகிருஷ்ணன்
 
**
 
 
தமிழ் எழுத்துலகின் மாஸ்டர்களில் ஒருவரான சுஜாதா அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை ஆம்னிபஸ் தெரிவித்துக்கொள்கிறது! 
நவீனத் தமிழின் வயது 79.
 
கடந்த பிப் 28ஆம் தேதி ஒரு பதிவு போடலாமே என ஆம்னிபஸ் நண்பர் கேட்டபோது, சாகாவரம் பெற்ற சுஜாதாவின் சாதனைக்கு பிறந்தநாள் மட்டுமே முக்கியம் என ஒட்டுமொத்தமாக ஆம்னிபஸ் நண்பர்கள் கூறிவிட்டனர்.



1 May 2013

விற்பனைச் சிறகுகளில் சாதனைச் சிகரங்கள் - தி.க.சந்திரசேகரன்

விற்பனைச் சிறகுகளில் சாதனைச் சிகரங்கள்
ஆசிரியர்: தி.க.சந்திரசேகரன்
விஜயா பதிப்பகம்
பக்கங்கள்: 184
விலை: ரூ.100



வீட்டிலிருந்து வேலை செய்யும்போது, அலுவலக விஷயமாக தொலைப்பேசியில் பேசும்போதுதான், சரியாக யாராவது காலிங்பெல் அடிப்பாங்க. யாரது இந்த நேரத்தில் என்று பார்க்கப் போனால், யாராவது ஒரு விற்பனையாளர், சார், இந்த xyz ரொம்ப நல்ல ஒரு ப்ராடெக்ட் சார். மிகவும் விலை குறைவு. நீங்க ஒரு ஐந்து நிமிடம் கொடுத்தீங்கன்னா, இதை எப்படி பயன்படுத்துவது என்று செயல்முறை விளக்கம் காட்டிடுவேன். நீங்க இதை வாங்கனும்னு அவசியம் இல்லை. இதை பார்த்தாலே போதும்னு கடகடன்னு பேசுவாங்க.

வேகாத வெயிலில் இப்படி வீடு வீடாகப் போய் விற்பவர்களைப் பார்த்தால் மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும்.அதற்காக எல்லாரையும் வரவேற்று அந்தப் பொருட்களைப் பார்த்து வாங்கவும் முடியாது. சரிதானே?

17 Apr 2013

மென்கலைகள் - என்.சொக்கன்

மென்கலைகள்
என்.சொக்கன்
பக்கங்கள்: 134
விலை: ரூ.90
மதி நிலையம்

Communication Skills அல்லது personality development என்பது போன்ற தலைப்புகளில் ஒவ்வொரு நூலகங்களிலும் பற்பல புத்தகங்கள் இருக்கும். அது சரி, இதையெல்லாம் எவன் படிப்பான்? செம போர் என்ற நண்பரிடம் நான் கேட்ட கேள்வி - அப்படின்னா இதெல்லாம் உங்களுக்கு நல்லா தெரியும்னு அர்த்தம். உங்க தகவல் தொடர்பு மிகவும் அருமையா இருக்குன்னு பொருள். வீட்டிலும், அலுவலகத்திலும் உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லே? உங்க வேலைகளை நீங்க சரியான நேரத்தில் முடித்து, உங்க imageஐ நல்லபடியா வைத்திருக்கிறீர்களா? என்று வரிசையா பல கேள்விகளைக் கேட்டதும், ஆள் அவுட். அப்படி இல்லே, அங்கங்கே சில இடைவெளிகள் இருக்கத்தான் செய்யுது என்றவரிடம், அதுக்குத்தான் இன்னும் இதே போல் புத்தகங்கள் வந்துகொண்டே இருக்கின்றன என்றேன்.

16 Apr 2013

நினைவோடை: பிரமிள் - சுந்தர ராமசாமி

தன்னுடன் பழகிய பல கலைஞர்களைப் பற்றி சுந்தர ராமசாமி நினைவோடை எழுதியுள்ளார். பிரமிள் மீது இன்றுவரை நீடித்திருக்கும் கவர்ச்சி, அவரது வித்தியாசமான குணாதிசயங்களைப் பற்றிப் படித்துள்ளதால் இந்த புத்தகத்தை வாங்கினேன்.
 
மாறாத பழக்க வழக்கங்களும், தடம் புரளாத மன சஞ்சலங்களும் இல்லாத மனிதர்கள் இருக்க முடியாது. கலைஞர்கள் அவ்வகையினரில் தனித்துவமானவர்கள். பல சமயங்களில் இத்தகைய குணமே அவர்களது அடையாளமாகவும், மக்கள் மறக்காததாகவும் ஆகிவிடுகிறது. கலை என்பதே விசித்திரத்தின் பெட்டகம் எனும் கூற்று அதற்கு ஏதோ ஒரு பூடகமான அர்த்தத்தைக் கொடுத்து விடும். ஆனால் அதுதான் உண்மை. கலை என்பது இதுதான் எனும் வரையறை ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை வெளியாகிறது. ஒன்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வெவ்வேறு வரையரைகள் கொடுக்கப்படுகின்றன. பெளதிகத்தின் theory of everything என்பதை முடிவு செய்ய விஞ்ஞானிகள் துடிப்பது போல, எதையாவது சொல்லி இது தான் கலை என நிர்ணயித்துவிட முடியாதா என காலங்காலமாய் முயற்சி நடந்துவருகிறது.
 
இதுவரை கலைக்குதான் வெற்றி.
 
 
 
 
குருவாகவும், ஆண்டவனாகவும் மாறிவிடும் கலைஞர்கள் இருந்தாலும் கூட, கலைஞர்களும் மனிதர்கள் தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. தீவிரமான மனநிலையில் உயிரைக் கொடுத்து போராடும் குணம் கொண்ட போராளிகள். அவர்களே தப்பிக்க நினைத்தாலும், கலை அவர்களை விடாது. தத்தளிக்கும் லெளகீக வாழ்வில், நாகராஜன் போல, புதுமைப்பித்தன் போல, கலைஞர்களாக வாழ்ந்து வருபவர்கள். மழை வருமுன் மண்வாசத்தைக் கைப்பற்றும் வேட்கை. எதற்காகவோ தீவிரமாக அடித்துக்கொள்வது போலத் தோன்றி பெரும் வில்லனாகக் கூட சித்தரிக்கப்படுபவர்கள்.
 

10 Apr 2013

அணு - என்.ராமதுரை

அணு
என்.ராமதுரை
பக்கங்கள்: 164
விலை: ரூ.115
கிழக்கு பதிப்பகம்.

சில வருடங்களாக தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் ஒரு தலைப்பு - கூடங்குளம். அணு மின்சாரம் உற்பத்தி செய்வதற்காகக் கட்டப்படும் இந்த உலையின் நன்மைகளை விளக்கி பட்டியலிடும் ஒரு சாரார் இருக்கையில், இத்தகைய உலையினால் ஏற்படும் செலவுகள், உலகில் ஏற்பட்ட விபத்துகள் மற்றும் விளையக்கூடிய தீமைகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு சாராரும் இருக்கின்றனர். அப்படி இருக்கையில் அணு’வைப் பற்றிய இந்தப் புத்தகம் சொல்வது என்ன? அணுமின்சாரம் நல்லதா? கெட்டதா? என்பதில் ஆசிரியர் எந்தப்பக்கத்தின் சார்பாக பேசுகிறார்? இதெல்லாம் விட அணு என்றால் என்ன? இதற்கெல்லாம் விடை இந்தப் புத்தகத்தில் உள்ளது.

4 Apr 2013

மருத்துவத்திற்கு மருத்துவம் – டாக்டர்.பி.எம்.ஹெக்டே – தமிழில். டாக்டர்.ஜீவானந்தம்





இன்றைக்கு இந்திய மருத்துவம் பயின்றவர்களுக்கு உள்ள மிகப்பெரிய சிக்கல் என்பது அவர்களுக்கு இந்திய மருத்துவத்தின் மீதும் பூரண நம்பிக்கை இல்லை, நவீன மருத்துவத்தின் மீதும் பூரண நம்பிக்கை இல்லை என்பதே. நவீன மருத்துவத்தின் எல்லையும் இந்திய மருத்துவத்தின் எல்லையும் வேறானவை. நவீன மருத்துவம் கைகழுவிய நோயாளிகளே பெரும்பாலும் இந்திய மருத்துவ முறைகளை நாடி வருகிறார்கள். நம்பிக்கை நீர்த்து தீராத பிணியிலிருந்து மீண்டெழ முடியும் என தங்கள் இறுதி நம்பிக்கையாக இந்திய மருத்துவத்தை நாடி வரும் ஒவ்வொரு நோயாளியை பார்க்கும் போதும் என் மனம் கலக்கமடையும். உண்மை நிலையை சொல்வது அவர்களின் நம்பிக்கையை அழிப்பதாகும், போலி வாக்குறுதிகளையும் அள்ளி வீசிவிட முடியாது. பெரும் மனப்போராட்டம் தான். நான் உண்மை நிலையை விளக்குவதையே எனது வழிமுறையாக கொண்டிருந்தேன், அண்மைய காலம் வரை. 

டாக்டர் பி.எம் ஹெக்டே 

3 Apr 2013

திருப்புமுனைகள் - என்.சொக்கன்

திருப்புமுனைகள் 
என்.சொக்கன் 
பக்கங்கள் : 280
விலை: ரூ.160
மதி நிலைய வெளியீடு 

சாலைகளில் திருப்பங்கள் வரும் முன்னர், இடது, வலது அல்லது கொண்டை ஊசி வளைவு  வரப்போகிறது என்று அறிவிப்புப் பலகை வைத்து எச்சரிக்கை செய்வார்கள். வாழ்க்கையில் அப்படி கிடையாது. அப்படிப்பட்ட திருப்புமுனை வந்து சென்றபின்னரே அது பற்றி நமக்குத் தெரியவரும். (சில நேரங்களில் அது தெரியாமலேயேகூட போகலாம்).  அதை  நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில்தான் நம் திறமை இருக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...