A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label த்ரில்லர். Show all posts
Showing posts with label த்ரில்லர். Show all posts

1 Aug 2013

The Singing Sands - Josephine Tey



த்ரில்லர் புத்தகங்கள் இருவகைப்பட்டவை: முதல் வகை புத்தகம் உங்களைச் சட்டையைப் பிடித்து நிறுத்தி வைத்துக் கொள்ளும். ஞாயிற்றுக் கிழமை இரவுத் தூக்கம் கெட்டாலும் பரவாயில்லை ஒரே மூச்சில் அது அத்தனையையும் படித்து முடிக்கும்வரை விடாது. மூச்சுத் திணறும் வேகத்தில் செல்லும் இந்தக் கதைகளில் அடுத்து வரும் திடுக்கிடும் திருப்பம் என்னவாக இருக்குமோ என்ற ஆவலுடன் நீங்கள் வாசித்துக் கொண்டே செல்வீர்கள். இரண்டாம் வகை புத்தகங்கள் உங்களைக் கதைக்குள் மெல்ல இழுத்துக் கொள்கின்றன. என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குமுன் நீங்கள் இந்தக் கதைகளில் உள்ள பாத்திரங்களைக் குறித்தும் இனி கதை எந்த திசையில் செல்லுமோ என்றும் கொஞ்சம் அதிகமாகவே கவலைப்பட ஆரம்பித்து விடுகிறீர்கள். இங்கே புனைவுக்கென்று தனியொரு தர்க்கமும் வாழ்வும் இருப்பதாகத் தோன்றுகிறது, திடீர் திருப்பங்களைத் தந்து உங்களைத் திக்குமுக்காடச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கதாசிரியரால் அலைக்கழிக்கப்படும் கதை இதிலெல்லாம் கிடையாது.

முதல் வகை கதைகள் உங்கள் ரயில் பயணங்களுக்குத் தேவைப்படலாம், இரண்டாம் வகை கதைகள் சோம்பல் ​​நிறைந்த மழைக்கால வாரயிறுதி நாட்களுக்குத் துணையிருக்கும் - உங்கள் வசமிருக்கும் அபரிதமான அந்த ஓய்வு நேரத்தில் முறையான இடைவெளிகளில் கோப்பை கோப்பையாக தேநீர் பருகியவாறே மர்மத்தின் சுவையை ரசித்து அனுபவிக்கலாம். ஜோசபைன் தே'யின் "The Singing Sands' இரண்டாம் வகையைச் சேர்ந்த மர்ம நாவல் (இதில் மூன்றாம் வகை த்ரில்லரும் உண்டு - இவற்றின் முப்பது நாற்பது பக்கங்களில் நீங்கள் வாசிப்பின் எல்லையைத் தொட்டு அதற்கு மேல் தொடர முடியாமல் நிறுத்தி விடுவீர்கள் - அந்தப் பேச்சு இங்கே வேண்டாம்!).

12 Jul 2013

Absolute Friends - John le Carré




“Tell him I sent you," she implores him as the train mercifully pulls out. "He is a graduate but democratic. Everyone in Berlin knows Sasha," which to Mundy sounds as convincing as everybody in Bombay knows Gupta.

“Go to Kruzeberg,” Ilse is howling after him, as he waves his last tragic farewells from the carriage window. “Ask for him there. And look after him Teddy”, she commands as a peremptory afterthought, which he has no time to explore before the train conveys him to the next stage of his life."

அவனது வாழ்வின் அடுத்த கட்டம் அவனை சாஷாவுக்கு நெருக்கமாக கொண்டு செல்கிறது. அவனும் சாஷாவும் 'பூரண நண்பர்களா’கின்றனர் (Absolute Friends). நாவலின் தலைப்பு உணர்த்துவது போல், இது ஒரு பூரண உறவைப் பற்றிய நாவல். சாதாரண மனித தர்க்கத்துக்கு அப்பால் இந்த உறவுகள் செயல்படுகின்றன என்பதே இதன் அடிப்படைப் பொருள்.

நாவலின் துவக்கத்தில் டெட் மண்டி நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஜெர்மானிய மன்னர் லுட்விக்கின் லிண்ட்ராஃப் கோட்டைக்கு வரும் ஆங்கிலம் அறிந்த சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறான் அவன். குழந்தை ஒன்றுக்குத் தாயாய் தனித்திருக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணைத் தன் உயிர்த்துணையாக கண்டடைந்திருக்கிறான், அவளது மகனைத் தன் மகனாக ஏற்றுக் கொண்டிருக்கிறான். இறந்த காலம், மண்டியின் நெடுங்கால நண்பன் சாஷாவின் உருவில் இவர்களின் அமைதியான வாழ்வுள் மெல்ல நுழைகிறது. 

4 Jul 2013

The Draining Lake - Arnaldur Indriðason


ஐஸ்லாந்திலிருக்கும் ஒரு ஏரி மர்மமான முறையில் வற்றிக் கொண்டிருக்கிறது; அந்த ஏரிக்குள் இறங்கும் பெண்ணொருத்தி ஒட்டுக் கேட்கும் கருவியொன்று கட்டப்பட்டிருக்கும் ஒரு எலும்புக் கூட்டை காண்கிறாள். காவல் துறை சம்பவ இடத்துக்கு வருகிறது; அந்த ஒட்டுக் கேட்கும் கருவியில் "Made in Russia" என்று பொரிக்கப்பட்டிருப்பதை கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள்; உளவறியும் நோக்கங்களுக்கு அது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். கருவியின் தொழில்நுட்ப விபரங்களைக் கொண்டு மேலும் துப்பு துலக்கி, அந்த எலும்புக்கூடு 1970களிலிருந்தே ஏரியில் கிடக்கிறது என்ற முடிவுக்கு வருகிறார்கள். இன்ஸ்பெக்டர் எர்லண்டர் ஸிவன்ஸன் தலைமையில் விசாரணை துவங்குகிறது; 1970களில் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுகிறார்கள். காவல் துறைக்கு இந்த விசாரணையில் எந்த ஆர்வமும் இல்லை. விசாரணையைக் கைவிட அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், எர்லண்டர் அதெல்லாம் முடியாது என்று விசாரணையைத் தொடர்கிறார். பல தசாப்தங்களுக்கு முன்னர் நடந்திருக்கக்கூடிய என்ற ஒரு கொலையை, எந்தவொரு துப்பும் இல்லாமல், எப்படிப் படிப்படியாக எர்லண்டர் கண்டுபிடிக்கிறார் என்பது இந்த மர்ம நாவலில் ஒரு இழை.

இந்நாவலில் இரண்டு வெவ்வேறு இழைகள் ஓடுகின்றன. ஒன்று, விசாரணை இழை. மற்றொன்று கொலைக்கு பின்னாலிருக்கும் காரணத்தை விளக்கும், கடந்த காலத்தைத் திரும்பக் கோர்க்கும் இழை. இரண்டாவது இழைதான் ஆர்வமூட்டுவதாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது. அது, லட்சியவாதியான ஒரு இளம் மாணவனைப் பற்றியது. கம்யூனிசத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்படும் அவன், பனிப்போர் காலத்தில் கிழக்கு ஜெர்மனியின் லைப்சிஷ் நகரத்தில் தன் மேற்படிப்பைத் தொடர முடிவு செய்கிறான். தீவிரமான கொள்கைப் பிடிப்புள்ள இளமையின் ஆர்வத்தோடு லைப்சிஷ் வரும் அவன், தன்னுடைய கம்யூனிசக் கொள்கைகளால் உலகையே தன்னால் மற்றிவிட முடியும் என்று நம்புகிறான். ஆனால், அவனுடைய நிஜ உலகம் அவனுடைய லட்சிய உலகத்தைக் காட்டிலும் வித்தியாசமாய் இயங்குகிறது என்பதைப் பின்னர்தான் உணருகிறான். தொடர்ந்த கண்காணிப்பு, அரசுக்கும் அதன் லட்சியங்களுக்கும் தான் விசுவாசமாக இருப்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவை, எப்போதுமிருக்கும் பயமும் மூச்சுமுட்டலும் - கிழக்கு ஜெர்மனியின் ஃபாசிசப் போக்கு அவனுக்கு புரியத் தொடங்குகிறது. அந்தச் சூழலில், யாரையுமே - நெருங்கிய நண்பர்கள் உட்பட - யாரையுமே நம்ப முடியாது. பெரியண்ணன் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய உளவாளிகள் மூலம் மட்டுமல்ல, உங்களுடைய நண்பர்கள், அக்கம்பக்கத்தவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று அனைவரைக் கொண்டும் பெரியண்ணன் உங்களை கவனித்துக் கொண்டேயிருக்கிறார்.

25 Jun 2013

The Devotion of Suspect X - Keigo Higashino

சிறப்புப் பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)


தன் கணவனிடமிருந்து விவாக ரத்து பெற்ற யாசுகோ டீனேஜ் மகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். சாப்பாட்டுக் கடையொன்றில் வேலை செய்யும் அவள், தான் தன் கடந்த காலத்தைக் கடந்து வந்துவிட்ட நினைப்பில் இருக்கிறாள். ஆனால், அவள் வேலை செய்து கொண்டிருக்கும் கடைக்கு அவளது முன்னாள் கணவன், டோகாஷி, வரும்போது கடந்த காலம் அவளைப் பிடித்துக்கொள்கிறது. 

வேலை செய்யும் இடத்தில் அவனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க மனமில்லாத அவள், அவனை ஒரு ரெஸ்டாரண்டில் சந்திக்க ஒப்புக் கொள்கிறாள். அங்கு அவனிடம் பேசிவிட்டு இனி நீ என்னைத் தொல்லை செய்யக்கூடாது என்று சொல்லி வீடு திரும்புகிறாள் யாசுகோ. ஆனால் அவளைப் பின்தொடர்ந்து டோகாஷியும் அவளது வீட்டுக்கு வந்து விடுகிறான். 

அபார்ட்மெண்ட்டில் மற்றவர்கள் முன்னால் அவனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க மனமில்லாமல் வேண்டா வெறுப்பாக அவனைத் தன் வீட்டுக்குள் வர அனுமதிக்கிறாள் யாசுகோ. அவன் வந்த கொஞ்ச நேரத்திலேயே அவளது மகள் மிசாடோ ஸ்கூல் விட்டு வீடு திரும்புகிறாள். மிசாடோவுக்கு டோகாஷி வளர்ப்புத் தந்தை முறை. 

பணம் கொடுத்து தன் முன்னாள் கணவனை வீட்டைவிட்டு வெளியேற்றப் பார்க்கிறாள் யாசுகோ. அவள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளும் டோகாஷி, மிசாடோ பற்றி மோசமாகப் பேசுகிறான். அதனால் கோபமடைந்த மிசாடோ ஒரு பூச்சட்டியை எடுத்து டோகாஷியைத் தாக்குகிறாள். அடி விழுந்ததும் டோகாஷிக்குக் கோபம் வந்து விடுகிறது. மிசாடோவை பதிலுக்குத் தாக்குகிறான். தன் மகளை அவன் கொன்று விடப் போகிறான் என்ற பயத்தில் யாசுகோ மின்சார வடத்தைக் கொண்டு டோகாஷியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து விடுகிறாள்.

21 Jun 2013

Miss Smilla’s Sense of Snow - Peter Hoeg

சிறப்புப் பதிவர்: எஸ்.சுரேஷ் (@raaga_suresh)

aka. Miss Simlla's Feeling for Snow

ஆறு வயதுச் சிறுவன் ஒருவன், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல்தளத்திலிருந்து கீழே விழுந்து செத்துப் போகிறான். அது வெறும் விபத்து என்று சொல்லி வழக்கை முடிவுக்குக் கொண்டு வர காவற் துறையினர் விரும்புகின்றனர். அதே குடியிருப்பில், அந்தச் சிறுவனோடு நட்பாக இருக்கும் மிஸ் ஸ்மில்லாவுக்கு அச்சிறுவனின் மரணம் விபத்து என்பதில் நம்பிக்கையில்லை.நடந்ததை அறிய அவரே தொடங்கும் விசாரணை அவர் உயிருக்கே உலை வைக்கப் பார்க்கிறது.

நாவலின் கதையென்று எடுத்துக் கொண்டால், த்ரில்லர் வகையைச் சேர்ந்த எந்த ஒரு நாவலின் கதையாகவும் இது இருக்கலாம். கதையின் நாயகமாக ஒரு பெண்; அவள் அபரிதமான திறமை கொண்டவள், ஆனால் சமூக உறவுகளில் சிக்கல். அமைதியான, ஆனால் பலசாலியான ஒரு ஆண், அவனிடம் நாயகிக்கு ஒரு ஈர்ப்பு; இக்கட்டான சமயத்தில் அவளுக்கு உதவ அவன் இருக்கிறான்; தங்களுடைய லாபத்தில் மட்டுமே குறியாக இருக்கும் ஒரு நாசகார நிறுவனம்; பதினைந்து நிமிட புகழுக்காக ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்யத் தயாராக இருக்கும் ஒரு வில்லத்தனமான விஞ்ஞானி. இப்படி ஒரு சாதாரண த்ரில்லருக்குத் தேவையான மசாலாக்கள் அத்தனையும் இங்கே உண்டு. ஆனால் பீட்டர் ஹாக்கின் பனி குறித்தப் புரிதலும், அவருடைய எழுத்து நடையும் படித்துவிட்டுத் தூக்கி வீசும் இன்னொரு நாவலாக இல்லாமல் திரும்பத் திரும்ப வாசிக்கும் நாவலாக Miss Smilla’s Sense of Snowவை காப்பாற்றி விடுகின்றன.

26 Dec 2012

உலோகம் - ஜெயமோகன்

ஜெயமோகனின் உலோகம் அவரது இணையதளத்தில் தொடராக வந்தபோது நான் ஏனோ வாசிக்கவில்லை. புத்தகமாக வந்தபின்னும் முதலில் வாங்கவில்லைதான். 

“இலங்கைத் தமிழருக்காய்க் குரல் கொடுக்கிறேன் என்பவர்களுக்கு, எது நடந்தால் என்ன என்று இருப்பவர்க்கு, குரல் கொடுக்க மாட்டேன் என்பவர்களுக்கு, தமிழர் நலனுக்காய் உழைக்கிறோம் நாங்கள் என்று மார்தட்டுவோருக்கு என்று யாரை எடுத்துக் கொண்டாலும் இலங்கையின் உண்மை நிலவரம் இங்கிருக்கும் யாருக்கும் நிச்சயமாகத் தெரியாது என்பது என் துணிபு” என்றார் அலுவலக நண்பர்.

”இப்போ என்ன திடீர்ன்னு இதைச் சொல்றீங்க?”, என்றவனிடம், “உலோகம் வாசிச்சேன்”, என்றார்.

“ஓ”

’உலோகம்’ வாசித்தால் உமக்கு அந்த இலங்கை அரசியல் பத்தி ஏதும் தெரியாவிட்டாலும் அகதிகள் பத்தி ஒரு அவுட்லைன் கிடைக்கும் பாருங்க”, என்றார்.

“வாசிக்கறேனுங்க”, என்றேன்.

"அவங்க லைஃப் பத்தி தெரிஞ்சிட்டா, நம்ம பி.பீ.ஓ. லைஃப் பத்தி அதன் பிறகு நிச்சயம் குறை சொல்லமாட்டீங்க. வாழ்வாங்கு வாழறோமய்யா  நாமெல்லாம்."

"மேனேஜரிசம் பேசறீங்களோ?"

“ஜெமோ வாசகர்தானே நீங்க? இன்னும் வாசிக்கலைன்றீங்க?

“வாசிக்கலாமுங்க. புக்கு எங்க போயிடப் போவுது” 


பின்னொரு நாளில் ஒரு 'கான்ஃபரன்ஸ் கால்' வேளையில் நம் நண்பருக்கும், மறுமுனையில் மேற்கு தேசமொன்றில் வசித்த புலம்பெயர்ந்த ஒருத்தருக்கும் நிகழ்ந்த முடிவுறா ஒரு விவாதம் என்னை உடனடியாக உலோகம் வாங்கச் செய்தது.

“உங்களுக்கு என்ன தெரியும்னு அந்த நாவலைக் கொண்டாடறீங்க”

“எதுவுமே தெரியாததாலதான் கொண்டாடறேன்னு வெச்சுக்கோங்களேன்”

“எதுவும் தெரிஞ்சா நிச்சயம் கொண்டாடமாட்டீங்க”

“சொல்லுங்க பாஸ். தெரிஞ்சிக்கறேன்”

“இல்லை. உங்க மாதிரி ஆசாமிக்கு புரிய வைக்கறது அத்தனை எளிமையில்லை”

“பிறகு எதுக்கு உங்களுக்கு என்ன தெரியுமுன்னு கேக்கறீங்க”

“இல்லை. நாம நிறுத்திக்குவோம். லெட்ஸ் கோ பேக் டு தி பிஸினஸ். டெல் மீ டிசம்பர் நம்பர்ஸ். லெட்ஸ் கோ த்ரூ”

நான் சிரித்துக் கொண்டேன்.

லோகம்.....!

அயல்தேசத்து நண்பர் சொன்னதுபோல, ’உலோகம்’ நிஜத்தின் பிம்பம் துளியும் இல்லாது முழுக்க முழுக்க புனைவாகவே கூட இருக்கலாம்.  எனினும் நம் நண்பர் சொன்னதுபோல் அகதி ஒருத்தனின் வாழ்வின் அவுட்லைனையேனும் குறைந்தபட்சம் நமக்குத் தருகிறது. தீவிரமான, அழுத்தந்திருத்தமான ஒரு அவுட்லைன்.

னக்குத் தெரிந்த த்ரில்லர் நாவல்கள் வேறுவிதமானவை. புலரும் நல்காலைப் பொழுதின் புள்ளினங்களின் சங்கீதத்துடனான இனிமை போல சந்தோஷமாகக் கதை தொடங்கும். இரண்டொரு அத்தியாயங்களுக்குள் ஒரு கொலை அரங்கேறும். டிடெக்டிவ் ஏஜென்ஸி நடத்துபவர் கதாநாயகராக கதையுள் நுழைவார். அவர் காதலியோ அல்லது மனைவியோ அவருடன் எப்போதும் உதவி டிடெக்டிவாக வளைய வருவார். கதைமாந்தர் மூவர், நால்வர் மீது சந்தேக நிழல் இருக்கும். ஒவ்வொரு சந்தேக முடிச்சாக நம் கதாநாயகர் அவிழ்க்க இறுதி அத்தியாயத்தில் கொலையாளி அடையாளம் காணப்படுவார்.

உலோகம் அந்த வகையிலான பத்தோடொன்றான த்ரில்லர் அன்று. துப்பாக்கியில் பொருத்தப்பட்ட குண்டு போன்று தனக்குத் தரப்பட்ட ஒரு குறிக்கோளுடன் இந்தியா வந்து இறங்குபவன் சார்லஸ் என்கிற சாந்தன்.  தன்னை இயக்கும் கை எந்தக் கை என்பதை அறியாத குண்டு அவன் என்பதுதான் ஒட்டுமொத்தக் கதையின் த்ரில்லையும் நம்மிடம் தக்க வைக்கும் காரணி.

சார்லஸ் செய்யும் கொலையில் துவங்குகிறது கதை. பொன்னம்பலத்தார் என்னும் பிரபல மனிதரைக் கொல்கிறான் சார்லஸ். கதை பின்னோக்கிச் செல்கிறது. ”கிளம்பு” என்றொரு ஒற்றை வார்த்தை ஆணை கிடைக்க அகதிகளோடு அகதியாக இந்தியா வந்திறங்குகிறான் சார்லஸ். அவனது பயணங்களும், சந்திக்கும் மனிதர்களும், ஒவ்வொரு கட்டமாக நகர்ந்து அவன் தனக்குத் தரப்பட்ட குறிக்கோளை நோக்கித் தன்னையறியாமலேயே பயணிப்பதுவும் இறுதி நிகழ்வாக பொன்னம்பலத்தாரைக் கொல்வதுமாகக் கதை நிறைகிறது. 

தமிழ் இயக்கங்களாலேயே கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் பத்தாயிரத்தைத் தொடும் என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வடகிழக்குப் பிராந்தியத்தின் முன்னாள் முதலமைச்சர் தெரிவித்தார். போராட்ட இயக்கங்களைப் பொருத்தவரையில் தம்மைப் பற்றி சரிவர அறியாத எதிரியைவிட தம்மைப் பற்றி நன்கு அறிந்த துரோகி மிகவும் ஆபத்தானவன். அதனால்தான் துரோகிகளாகத்  தாங்கள் அடையாளம் கண்டுகொள்பவர்களைக்  களையெடுப்பதில் இயக்கங்கள் பெருமுனைப்பு காண்பிக்கின்றன.

இயக்கத்தால் அப்படிப்பட்ட துரோகியாக அடையாளம் காணப்பட்டவரான பொன்னம்பலத்தாரை மற்றொரு துரோகத்தின் துணையைக் கொண்டே முடிப்பதுதான் ஒட்டுமொத்தக் கதையும்.

அந்தக் கொலையும் அதற்கான காரணமும் அது அரங்கேறும் விதமும் மட்டுமே கதையாகியிருந்தால் உலோகம் ஒரு சராசரி த்ரில்லராக இருந்திருக்கும். உலோகம் சம்பவங்களின் வழியே சொல்லப்படுவதாக அல்லாமல் சார்லஸின் உள்ளம் வழியே பயணிக்கிறது. நம்மருகே அமர்ந்து சம்பவங்களைச் சொல்பவனாக சார்லசின் பார்வையில் விரிகிறது கதை. வாழ்க்கையின் சில விசித்திர கணங்களையும், பல தீவிர கணங்களையும்  சார்லஸ் வழியே ஜெயமோகன் நம்முன் வைக்கிறார். 

துப்பாக்கித் நம்மைத் துளைக்கும் தருணத்தில்  நாம் அதை உணர்வது எப்படி இருக்கும் , நடுக்கடலில் துப்பாக்கிகளின் முழக்கங்களில் இருந்து தப்பிக்கும் தருணம் தரும் போதை, சித்திரவதையின் வலி, அதை அனுபவிக்கும் ஒருவனின் அந்தக் கண நேர சிந்தனை.... இப்படிக்  கதை நெடூக ஒரு சராசரி மனிதன் சந்தித்திராத தீவிர சம்பவங்களின் கோர்வையால் கோர்க்கப்பட்டு நம்மைக் கட்டிப்போடுகிறது புத்தகம்.

இந்நாவலை வாசித்தவர்கள், நுனிப்புல் மேய்ந்தவர்கள், வாசிக்காதவர்கள் என அனைவருமே பொதுவாக இது இயக்கங்களுக்கு எதிரான நாவலாகப் பார்க்கிறார்கள்.  உன்னிப்பான வாசிப்பில் இந்திய உளவுத்துறையின் தேவை சார்ந்த விளையாட்டுகளும் அது சார்ந்த சம்பவங்களையும் கதையில் காணலாம்.

உலக அரங்கில் இலங்கை சதுரங்கப் பலகையாகி, அதன் விடுதலை இயக்கங்களும் கூட இந்தியா இயக்கிய சதுரங்கப் பொம்மைகளான தோற்றம் நாவல் வாசிக்கையில் உங்களுக்குக் கிடைத்தால் அது ஆச்சர்யமில்லை.

உலோகம் - ஜெயமோகன்
த்ரில்லர் நாவல்
பக்கங்கள் 216 / விலை ரூ. 50/-
இணையம் மூலம் வாங்க: கிழக்கு / 600024.காம்
இணையத்தில் வாசிக்க: ஜெயமோகன்.இன்

Related Posts Plugin for WordPress, Blogger...