A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

6 Dec 2012

இரும்பு குதிரைகள்-பாலகுமாரன்


பெயர்       : இரும்பு குதிரைகள்
ஆசிரியர்      : பாலகுமாரன்
உள்ளடக்கம்   : நாவல்
பதிப்பகம்/ To buy/Photo Courtesy : விசா பப்ளிகேஷன்ஸ்

பொறுப்பு துறப்பு :  மிகத் தீவிர பாலகுமாரன் ரசிகர்கள் இந்தக் கட்டுரையின் முதல் இரண்டு பத்திகளை தவிர்க்கவும் :-)
இது நான் வாசிக்கும் முதல் பாலகுமாரன் நாவல். நான் எப்போதும் புத்தகம் வாடகை எடுக்கும் நூலகத்தில் பாலகுமாரன் நாவல் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். ஏனோ அந்த புத்தகம் எல்லாம் எடுத்து படிக்கவேண்டும் என்று ஒரு எண்ணம் வந்ததே இல்லை. சின்ன வயசில் குமுதம், கல்கி, ஆ.வி படிச்சா வீட்டுல திட்டுவாங்க. ஆனா அதையும் தாண்டி பரீட்சை முடிஞ்சு, பரீட்சைக்கு காலைன்னு  ,கதை புஸ்தகம் படிச்சே வளர்ந்த பலகீனமான உடம்பு இதுJ.

எதாவது நல்ல கதை  மேற்குறிப்பட்ட புஸ்தகத்தில் வந்தால், அதை பத்தி சின்ன உரையாடல் ஓடும், ’இந்த கதை படிச்சியா ? இல்லைனா படிச்சுரு?’ ஆனா ஒரு தடவை கூட பாலகுமாரன் கதை படிச்சியான்னு என்னை யாரும் கேட்டது இல்லை, ஒரு சில சமயம் சில நாவல் நல்லா இருந்தா அம்மா கூடபடிக்கச் சொல்லுவாங்க. (ஏற்கனவே படிக்க ஆரம்பிச்சு இருப்பேன்), ஆனா பாலகுமாரன் பேச்சு எடுத்தா புடிக்காது. அவரு ரெண்டு கல்யாணம் பண்ணி இருந்தது தான் காரணமா இருக்கலாம்.  


5 Dec 2012

கோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி


கோபுலு!

இந்தப் பெயரை கார்ட்டூன்களோடு மட்டுமே தொடர்புப்படுத்திப் பார்க்கத் தெரியும் எனக்கு. மதன் போல ஆனந்த விகடனின் முன்னாள் அரசியல் கார்ட்டூனிஸ்ட் / ஜோக் எழுத்தாளர் இவர் என்பது நான் இவர்பற்றி கொண்டிருந்த சித்திரம். எங்கள் அம்மாவழிப் பாட்டி வீட்டில் எண்பதுகளில் பார்த்த பைண்ட் செய்யப்பட வாஷிங்கடனில் திருமணம் புத்தகத்தில் வந்த ஓவியங்களில் இவர் பெயரைப் பார்த்திருக்கிறேன்.


”கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை” :  கிழக்கு பதிப்பகத்தின் அதிரடித் தள்ளுபடி விற்பனையின்போது வாங்கக் கிடைத்த புத்தகம். "பின்னொரு நாளில் படித்துக் கொள்ளலாம்" என்று இந்தப் புத்தகத்தை வாங்கிப் போட்டிருந்தேன். வெள்ளை நிற அட்டையில் கருப்பு வெள்ளையில் கோபுலு ஓவியம் வரைவது போன்ற நேர்த்தியான, அழகான வடிவமைப்பு கொண்ட புத்தகம். புத்தக அட்டையை வடிவமைத்தவரும் நான் புத்தகம் வாங்க முக்கியக் காரணமாக இருக்கலாம். 


சமீபத்தில் எங்கள் வீட்டிற்கு வந்தபோது என் அலமாரியில் இப்புத்தகத்தைப் பார்த்த சுனீல் கிருஷ்ணன், "இந்த புக்கைப் பத்தியெல்லாம்  எழுதுங்க கிரி. ", என்றார். புத்தகத்தை எடுத்து வாசிக்கத் துவங்கினேன். தொண்ணூறே நிமிடங்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நம்மைப் படிக்கவைக்க வல்ல நடை.  

கோபுலு ஒரு வேடிக்கைச் சித்திர ஓவியர் / கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல தேர்ந்த  ஓவியங்கள் வரைவதிலும் வல்லவர். முன்னாள் தஞ்சை ஓவியக்கல்லூரி மாணவர், ஆனந்தவிகடனில் மாலி, தேவன், சாவி, சில்பி போன்ற பிதாமகர்களுடன் பணிபுரிந்தவர், பின்னர் சில விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்தவர், கடந்த நாற்பது வருடங்களாக ஆட்வேவ் (AdWave) என்னும் விளம்பர நிறுவனம் நடத்தி  வருபவர்....

.....இந்தத் தகவல்கள் மட்டுமில்லை புத்தகம். இப்படித் தகவல்களோடு நிறைந்திருந்தால் பத்தோடு பதினொன்றான மற்றுமோர் வாழ்க்கை வரலாறுப் புத்தகாம இருந்திருக்கும் இந்தப் புத்தகம். ஆனால், வாழ்க்கையின் நெடிய பாதையைக் கடந்து வந்த ஒருவர் ஈஸிசேரில் சாவகாசமாக அமர்ந்தவாறு சொல்லும் ஒரு கதையை அவர் எதிரில் அமர்ந்து கேட்பதான பாவனையில் புத்தகத்தை வாசிக்க முடிகிறது நம்மால் எனபதுதான் புத்தகத்தின் சிறப்பு. புத்தகமும் அப்படித்தான் உருவாகியிருக்கிறது.



கோபுலுவின் வார்த்தைகளிலேயே விரிகிறது அவர் வாழ்க்கைக்கதை. அதை நேர்த்தியாகத் தொகுத்து நயம்பட தந்திருக்கிறார் சந்திரமௌலி. எண்பது வயது கடந்த ஒருவர் சொல்லச் சொல்லக் கேட்டு அதை ஒரு சுவாரசிய நடையில் புத்தக வடிவில்  கொண்டு வருதல் எளிதன்று. சந்திரமௌலி இதைத் திறம்பட செய்திருக்கிறார். 

தன் குழந்தைப் பருவத்தைப் பற்றி கூறும்போது நிஜக்குழந்தையாகவே மாறிப் போகிறார் கோபுலு. குதூகலம் கொப்பளிக்கும் அந்த முதல் நான்கு அத்தியாயங்களை வாசிக்கையில் எங்கள் கிராமத்து வாழ்க்கைக்கே என்னைக் கொண்டு சென்றுவிட்டார் கோபுலு.

சின்னஞ்சிறுவர்கள் மனதில் தேங்கிப் போயிருக்கும் சில அசட்டு நம்பிக்கைகளும் அந்த அசட்டு நம்பிக்கைகளைச் சுற்றி அவரவர் இஷ்டத்திற்கு கட்டியெழுப்பும் புதுப்புதுக் கதைகளும் எல்லோர் வாழ்க்கையிலும் சகஜம். கோபுலு குறிப்பிடும் “பீரங்கிக்குள் ஐந்துதலை நாகம்” அத்தகையது.

சென்னை போன்ற நகரங்களில் இப்போது தடையில் இருக்கும் ”பட்டம் விடுதல்” கோபுலு வளர்ந்த தஞ்சை மாநகரில் எப்படி கனஜோராக நடந்தது என்பதை சொல்ல ஒரு அத்தியாயம். தஞ்சை மன்னன் கட்டிய பெரிய கோயிலின் பிரகார ஓரங்களின் மண்டபத்தை ஒட்டிய குழிகளெல்லாம் கோபுலு & கோ மாஞ்சா தயாரிப்பதற்கு பாட்டில் ஓடு அரைக்கப் பயன்பட்டிருக்கின்றனவாம். கோயில் வளாகத்திலேயே மாஞ்சா போட்ட நூலைக் காய வைப்பார்களாம் (1920 - 30 வருடங்கள்). கேட்கவே (படிக்கவே) வேடிக்கையாக இருக்கிறது.

தீபாவளி நேரத்தில் தெருத்தெருவாகச் சென்று வெடிக்காத பட்டாசுகளைச் சேகரித்த அனுபவம் உங்களுக்கு உண்டா? அவற்றைப் பிரித்தெடுத்து அவற்றினுள்ளே இருக்கும் வெடிமருந்தைச் சேகரிக்கும் வேலையைச் செய்தது? எனக்கென்னவோ இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு வெடிமருந்தின் நிறம் என்னவென்று தெரியுமோ என்பதே கேள்வியாக இருக்கிறது. கோபுலு தீபாவளிக்குப் பட்டாசு வாங்கிய / வெடித்த கதை இப்போது முப்பது வயதைக் கடந்த எல்லோரையும் தம் பால்ய வயதிற்கு நிச்சயம் கொண்டு செல்லும்.

இந்த பால்ய வயதின் பக்கங்களைப் பற்றி நான் விலாவரியாகப் பேசக் காரணமே, நான் முன்னமே குறிப்பிட்ட அவற்றின் குதூகலம் கொப்பளிக்கும் குழந்தைத்தன நடைதான். 

பால்ய வயதிற்குப் பின் ஓவியக் கல்லூரியில் பயின்றது, பணிநிமித்தம் மும்பை, சென்னை என்று பயணப்பட்டது. சென்னையில் விகடனில் பதினெட்டு வருடங்கள் பணிபுரிந்தது, அங்கே சந்தித்த பெரிய மனிதர்கள், அவர்களுடனான நட்பு, சில சுவாரசிய / ருசிகர அனுபவங்கள், படங்கள் வரைவதற்காக மேற்கொண்ட பயணங்கள் என்று அடுத்த ஆறு அத்தியாயங்கள் செல்கின்றன.

விகடனில் இருந்து விலகி ஒன்பது வருடங்கள் வெளியே விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவங்களும், அடுத்தது AdWave அத்தியாயங்களும் பேசி நிறைகிறது புத்தகம்.

இத்தனை சுவாரசியங்கள் தாண்டி புத்தகத்தில் ஒரு பெரும் குறை உண்டு. கோபுலு வரைந்த ஓவியம் ஒன்றேயொன்றைத்தான் மொத்தப் புத்தகத்திலும் நமக்குத் தந்திருக்கிறார்கள். இதற்கு நியாயமான காரணங்கள் இருக்கக்கூடும், எனினும், இதை ஒரு பெரிய குறையாகவே நான் காண்கிறேன்.

காளிமார்க் பானங்களின் அந்நாளைய விற்பனைக்கு கோபுலு டிசைன் செய்து தந்த விளம்பரங்கள் பெரிதும் உதவியுள்ளன. ஒரு சாம்பிள் இங்கே.

நன்றி: http://www.neerottam.com


கோபுலு கலைமாமணி விருது பெற்றவர், ஞானபாரதி அறக்கட்டளையின் அறங்காவலர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர். தில்லானா மோகனாம்பாள் திரைப்படமானது விகடனில் தொடர்கதையாக வந்தபோது அதற்கு ஓவியம் படைத்தவர் என்பவை தாண்டி, ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் லோகோ மனிதரை உருவாக்கியவர், இப்போது நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் சன் டிவி’க்கான லோகோவை வடிவமைத்தவரும் அவரே.

புத்தகத்தின் பின்னட்டையில் குறிப்பிடுகிறார்கள்:

”ஓவியர் கோபுலுவின் வாழ்க்கையை அவரது எழுத்திலேயே படிப்பதென்பது, ஓர் அருமையான கருப்பு-வெள்ளைத் திரைப்படத்தை நீண்ட நாள் கழித்துப் பார்க்கும் ஏகானுபவம்”

ஆம்! ஏகானுபவம்தான்!

கோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை
எஸ். சந்திரமௌலி
வாழ்க்கை வரலாறு
112 பக்கங்கள் / விலை ரூ.60/-
இணையம் வழியே புத்தகம் வாங்க: கிழக்கு

4 Dec 2012

ரஜினியின் பன்ச் தந்திரம்


கிழக்கு பதிப்பகம்
ஆசிரியர்கள்: பி.சி.பாலசுப்ரமணியன் / ராஜா கிருஷ்ணமூர்த்தி
பக்கங்கள்: 132
விலை: ரூ.80

***



Toastmasters பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். பேச்சுத் திறன் உட்பட ஒட்டுமொத்த communication skillsகளை வளர்க்க உதவும் ஒரு அமைப்பு. அதில் Table Topics என்று ஒரு பகுதி. ஏதேனும் ஒரு தலைப்பு கொடுப்பார்கள். உடனடியாக அதைப் பற்றி இரு நிமிடங்கள் பேச வேண்டும் என்பது விதி. சில மாதங்கள் இதில் பங்குபெற்றாலும் அவன் Table topics பகுதி வரும்போது பயங்கர பரபரப்பு ஆகிவிடுவான். அவ்வளவு தேர்ந்த பேச்சாளரா என்று யாரும் ஆச்சரியப் படவேண்டாம். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதையாவது பேசிவிட்டு, இறுதியில் அந்த தலைப்பைக் கொண்டு சேர்ந்து விட்டால் ஆச்சு என்னும் ஒரு குறுக்குவழியை கண்டுபிடித்திருந்தான். இதே போல், நம் ஊர் உதாரணமும் ஒன்று உண்டு. தேர்வுக்கு தென்னை மரத்தைப் பற்றி படித்துக் கொண்டு போயிருந்தான் ஒருவன். ஆனால், அங்கே மாட்டைப் பற்றி கேள்வி கேட்டார்கள். இவனும், தென்னையைப் பற்றி முழுக்க எழுதிவிட்டு, இப்படிப்பட்ட மரத்தில்தான் மாட்டைக் கட்டுவார்கள் என்று எழுதிவிட்டான்.

3 Dec 2012

அனல் காற்று - ஜெயமோகன்



பாலுமகேந்திராவுக்காக எழுதப்பட்ட கதை. என்ன காரணத்தினாலோ திரையாக்கம் பெறவில்லை. காதல், காமம் என்றெல்லாம் பெயர்வைத்து நாம் பிதற்றிக் கொள்ளும் மனித உறவுகளைப் பற்றிய கதைதான். நமக்கு ஒருவரைப் பிடித்துப் போய் விட்டால் அவரின் அருகாமை வேண்டி, இன்மை இல்லாதிருக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம். எந்த உறவாக இருப்பினும் நெருக்கம் அதிகரிக்குந்தோறும் அந்த உறவுக்கான மரபு மீறப்படும். மன மகிழ்ச்சி மட்டுமே முதன்மையாக இருக்கும். சிலநேரங்களில் 

இப்படியாக மகிழ்ந்த வாழ்வின் உறவென்பது முதிர்ச்சி அடையும். ஒரு கட்டத்தில் வந்த பாதை கசக்கும். மனம் வேறொரு உறவை நாடும். பழைய உறவைத் தொடர முடியாமலும், புதிய உறவில் நெருங்க முடியாமலும் மனம் அல்லாடும். அந்த நேரத்தில் எடுக்கப்படும் ஒரு முடிவு எதோ ஒரு உறவை காய்ந்த சிறகு இறந்து உதிர்வதைப் போல மரணிக்கச் செய்யும். இப்படிப்பட்ட ஒரு கதைதான் அனல் காற்று.

அருணின் ஃபிளாஷ்பேக்கில் கதை துவங்குகிறது. கணவன் தன்னை ஏமாற்றியதால் வாழ்க்கையில் நொடிந்து போனவளான அம்மா, தனியாய் அருணை நல்லவனாக வளர்க்க எண்ணுகிறாள். அம்மாவின் தோழியான கணவனை இழந்த சந்திரா, தகப்பன் இல்லாத அருண் இருவருக்குள்ளான உறவு காதல், காமம் என எல்லை தாண்டிப் போகிறது. அந்த நேரத்தில் வந்து சேர்கிறாள் அருணின் முறைப்பெண்ணான சுசீலா. சந்திராவுடனான உறவில் முதிர்ச்சியடைந்த அருண் சுசீலாவை விரும்புகிறான். அவளைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். இதற்கு சந்திரா தடையாக இருக்க, இவர்கள் உறவு அம்மாவிற்கும் தெரிய வருகிறது. 

இறுதியில் என்ன ஆனது, யார் யாரை மணக்கிறார்கள் என்பதுதான் கதை.

இந்தக் கதையில் நம்மை மிகவும் கவர்வது கதாபாத்திரங்களின் உருவாக்கமும் சொல்லப்பட்ட விதமும்தான். கணவன் ஏமாற்றியதால் தன் மகனை நல்லவனாக வளர்க்க வேண்டும் என்ற முனைப்பில் கண்டிப்பாக இருக்கும் அம்மா. தன்னை ஏமாற்றிய கணவன் இறந்தபோது கூட அவர் மேல் சிறு பரிதாபம் கூட காட்டாதது இயல்பே. வளர்ந்த பின்னரும் தன் மகன் தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும், தன் மகன் இன்னும் வளரவில்லை குழந்தை என்றெண்ணி கொள்ளும் ஒரு தாய். தன் மகன் தந்தை நினைப்பில்லாமல் வளரவேண்டும் என்று பக்குவமாக வளர்த்தும் கடைசியில் அவன் தந்தையின் இன்னொரு குடும்பத்திற்கு உதவியாக இருப்பதைக் கண்டு உடைந்து போகிறார். இருந்தாலும் இறுதியில் உண்மை உணர்ந்து மகனின் மனிதாபிமானத்தை மெச்சுகிறார்.

தந்தை இல்லை, தாயும் மிகக் கண்டிப்பு என்பதால் தன்னுள் இருக்கும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஓரிதயம் தேடும் அருண். அம்மாவின் தோழி என்றாலும் கூட, தன்னை விட பெரியவள் என்றாலும் கூட ஆதரவாக இருக்கும் சந்திராவிடம் எல்லை மீறுகிறான். அதே சமயம், தந்தை என்னதான் துரோகம் செய்திருந்தாலும் அவர் மேலும் கரிசனம் கொண்டு அவர் குடும்பத்தை கவனிக்கிறான். தன் மீது மிகுந்த காதல் கொண்டிருக்கும் சுசீலாவையும் நேசிக்கிறான். சந்திராவிடம் ஒரு குழந்தையாக, புதைந்து அழுது சோகங்களைத் தீர்த்துக் கொள்பவனாகவும், சுசீலாவிடம் ஒரு ஆணாக, அவளை அரவணைத்து நேசிக்கும் ஒருவனாகவும் இருக்கிறான். இதுவே அவனைக் குழம்பச் செய்கிறது. கணவன் இறந்த பின் அருணை நேசிக்கும் சந்திரா. தவறென்று தெரிந்தும் உறவை விட முடியாமல் சுசீலா வந்ததும் பொறாமை கொள்ளும் குணாதிசயம் கொண்டவள்.

மனித மனம் மிக விசித்திரமானது. சோகத்தில் அது நம்மை விரும்புபவர்களையும், மகிழ்ச்சியில் நாம் விரும்புபவர்களையும் நாடும். அருணின் நிலையும் அதுதான். அம்மாவின் கண்டிப்பில் வளர்ந்ததனால் என்னவோ அருணுக்கு உறவுகளின் வலி தெரிந்திருக்கிறது. அப்பாவின் குடும்பத்தை, சித்தியை, தங்கைகளை நேசிக்கிறான். இருந்தும் அவனுள் இருக்கும் வாலிபத்தின் எண்ணச் சிதறல்கள் சந்திராவுடன் அவனை நெருக்கமாக்குகிறது.

இந்தக் கதையில் சுசீலாவின் பாத்திர அமைப்பு மட்டுமே கொஞ்சம் குழப்பமானதாக இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து வந்தவள், அருண் மீதான காதல், கலாச்சார மிக்கவள் என்றெல்லாம் இருந்தாலும் சுசீலாவின் பெண்களுக்கே உரிய அந்த ‘இன்ஸ்டின்க்ட்’ அருண் தவறு செய்வதைக் காட்டிக் கொடுக்கிறது. அருணை வெறுக்கிறாள். இறுதியில் அருணின் குணம் கண்டு விரும்புகிறாள். சுசீலா பாத்திரத்தை கொஞ்சம் கூட அழகாக்கி இருக்கலாமோ?.

பாலு மகேந்திரா என்று படித்த உடனேயே, தொடர்ந்து கதை வாசிக்க வாசிக்க மனதில் காட்சிகள் ஓடத் தொடங்கி விட்டன. அருணாக ஜெயம் ரவி, சந்திராவாக பிரியாமணி & சுசீலாவாக அனன்யா. நான் கற்பனை செய்தது இப்படித்தான்.

வெப்பம் கூடிச் சென்றால் ஒன்று மிதமிஞ்சி குளிர்ந்து மழையாகி விடவேண்டும் இல்லையேல் அது ஊரையே எரித்து விடும். உறவைப் பேசும் வகையில் இது ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைத் தரும் நாவல்.

நாவல் | ஜெயமோகன் | தமிழினி | ரூ. 90
இணையத்தில் வாங்க: கிழக்கு


2 Dec 2012

பொய்த் தேவு - க.ந.சுப்பிரமணியம்

மனிதனுடைய மனசிலே, உள்ளத்திலே, அந்தரங்கத்திலே விதவிதமான சக்திகள், நவநவமான உணர்ச்சிகள் வினாடிக்கு வினாடி மூளுகின்றன - மூண்டு மூண்டுபோராடுகின்றன.

இந்தப் போராட்டமே மனிதனுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.


ஒரு சக்தி, ஓர் உணர்ச்சி வெற்றி பெற்று ஒரு வினாடி தலை தூக்கி நிற்கும். ஆனால் அடுத்த வினாடியே இன்னொரு சக்தி தோன்றி அதை வீழ்த்திவிட்டு அவன்மீது ஆட்சி செலுத்தத் தொடங்குகிறது. இந்தச் சக்தியினுடைய ஆதிக்கம் நீடிப்பதும் ஒரே வினாடிதான்.


இந்தப் போராட்டத்துக்கெல்லாம் பின்னணியாக இருக்கும் மனிதன் தன் உள்ளத்திலே ஒரு லக்ஷ்யத்தை, ஒரு தெய்வத்தை கற்பனை பண்ணிக்கொண்டு வாழ ஆரம்பித்துவிட்டானானால் அவனை பாக்கியசாலி என்றே சொல்ல வேண்டும்.
(பக்.256)

இங்கே எல்லாமே தெய்வங்கள். ஆசைகள், லக்ஷ்யங்கள், சிந்தனைகள் எல்லாமே தெய்வங்கள். இந்த நொடியில் எதற்காக ஆசைப்படுகிறோமோ, அது தெய்வம்; எது சிந்தையில் இருக்கிறதோ, அது தெய்வம்; எதில் நம்பிக்கை வைக்கிறோமோ, அது தெய்வம். மற்றவை எல்லாம் அந்த நொடியில் அசுர கணங்கள், தீய சக்திகள். எல்லா தெய்வங்களையும்விட பணம்தான் சக்தி மிகுந்த தெய்வம். 

1 Dec 2012

Notes from SMALL ISLAND -Bill Bryson



Name       : Notes from a SMALL ISLAND
Author     : BILL BRYSON
Black Swan books
To Buy     : Amazon
  
மூன்றாண்டுகள் நான் நகரத்தில் வாழ்ந்திருக்கிறேன், இப்போது சில மாதங்களாக மீண்டும் அதே நரகம்- நகரம். எப்போது இந்த நகரத்தை விட்டுப் போகும்போதும், போகிற காரணம் மனதுக்கு பிடித்ததாக இல்லாவிட்டாலும், போகிற சொந்த ஊர் மனதுக்கு இதம் தருவதாகவே இருந்தது. நீங்கள் ஒரு ஊருக்கு வருகிறீர்கள், கிட்டதட்ட இருபது வருடங்கள் அங்கே இருக்கிறீர்கள், மீண்டும் சொந்த ஊர் போகிறீர்கள். போவதற்கு ஒரு மாதம் முன் என்ன செய்வீர்கள்? யோசிங்க.

அ.முத்துலிங்கம் எழுதிய ”அங்கே இப்ப என்ன நேரம்” கட்டுரை தொகுப்பின் வழியாக, பில் ப்ரைசன் என்று ஒருவர் எழுதுவதாக எனக்கு அறிமுகம் ஆனது. இந்த தடவை நூலகம் சென்றபோது, ப்ரைஸனின் இந்தப் புத்தகம் எடுத்து வந்தேன். 

பில் ப்ரைசன் அமெரிக்காவில் பிறந்தவர், 1973ஆம் ஆண்டுவாக்கில் இங்கிலாந்து வருகிறார். இருபது வருடம் இங்கிலாந்தில் வாழ்ந்துவிட்டு தனது சொந்த நாடான அமெரிக்கா செல்ல முடிவு செய்கிறார். அப்போதுதான் இத்தனை வருடங்கள் தான் வாழ்ந்த இந்தச் சின்ன இங்கிலாந்து தீவை, தான் முதலில் வந்தடைந்த துறைமுகத்திலிருந்து ஆரம்பித்து, தீவெங்கும் சுற்றி பார்ப்பதும், அது தொடர்பான நிகழ்ச்சிகளுமாகச் சின்னச் சின்ன அத்தியாயங்களாக இந்தப் புத்தகம்.


                                                    


30 Nov 2012

அகிலனின் 'தாகம்'

அகிலனின் கதைகளைப் படிப்பது மிகவும் கொடுமையான அனுபவம் என்று அண்மையில் ஒரு நண்பர் சொன்னார். 'நீங்கள் அகிலனின் மொழிபெயர்ப்புகளை வாசிக்க வேண்டும், அவை மிக அருமையானவை,' என்று அவருக்கு பதிலளித்தார் மற்றொரு நண்பர். அகிலன், மாப்பஸான் கதைகள் மற்றும் ஆஸ்கார் ஒயில்டை மொழிபெயர்த்திருக்கிறார் என்பது எனக்கு ஒரு நம்ப முடியாத செய்தியாக இருந்தது. விக்டோரிய காலத்து ஒழுக்க விழுமியங்களுக்கு எதிரான கலகக்காரனாக இருந்த ஒயில்டு, அவரது தற்பாலின விழைவால் எழுந்த பிரச்சினைகளுக்காக மிகக் கடுமையாக தண்டிக்கப்பட்டார். மத்தாப்பாகத் தெறிக்கும் ஒயில்டின் மொழி மற்றொரு காரணம் - அவரது எழுத்தில் மேற்கோள்களாக கையாளத்தக்கவற்றைத் தேர்ந்தெடுத்துப் பதிப்பித்த முன்னூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட புத்தகத்தை வாசித்திருக்கிறேன், ஒயில்டின் எழுத்தில் ஒவ்வொரு பத்தியிலும் ஒரு மேற்கோளைக் காணலாம். "சினிக் என்பவன் யார்? எல்லாவற்றின் விலையையும் அறிந்தவன், எதன் மதிப்பையும் அறியாதவன்" என்ற ஒரு மேற்கோளே காலத்துக்கும் போதும். அகிலனின்  இழுத்துப் போர்த்திய, கனமான  நடையை, "நாமெல்லாரும் சாக்கடையில்தான் கிடக்கிறோம், ஆனால் நம்மில் சிலர்தான் நட்சத்திரங்களைப் பார்க்கிறோம்" என்று சொன்னவரோடு இணைத்தே பார்க்க முடியவில்லை.

ஆஸ்கார் ஒயில்டின் சலோமி என்ற நாடகத்தை அகிலன் தாகம் என்ற குறுநாவலாக மொழிபெயர்த்திருக்கிறார், அதைவிட, தழுவி எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம். ஒரு நாடகத்தை குறுநாவலாக மொழிபெயர்க்க முடியாது என்பது மட்டுமல்ல, அகிலன் நிறைய சுதந்திரம் எடுத்துக்கொண்டுதான் இந்த வேலையைச் செய்திருக்கிறார். அகிலனுக்கும் ஒயில்டுக்கும் என்ன ஒற்றுமை, இந்தக் கதையை ஏன் அவர் மொழிபெயர்க்க எடுத்துக்கொண்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அகிலனின் 'கற்பான' தழுவல் ஒயில்டின் வரம்பு மீறிய தழுவலைச் சுத்திகரிப்பதாக இருக்கிறது.


29 Nov 2012

Nammalvar- Hymns for the Drowning - A.K.Ramanujan

உபயவேதாந்தம் என வேதம் மற்றும் வேதாந்தத்தின் சாரமாகச் சொல்லப்படும் பிரபந்தங்கள் எனும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பரம்பொருளான விஷ்ணுவைப் போற்றி பாடப் பெற்றவை. தமிழின் மிகச் செறிவான கவிதைகளாகவும், பக்தி ரசத்தின் தொடக்கமாகவும் கருதப்படும் இப்பிரபந்தங்களை ஜகத்ரட்சகன், ஸ்ரீராம பாரதி போன்ற பலர் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்துள்ளனர். அவற்றுள் மொழியியலாளர் .கே.ராமானுஜன் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்த நூறு பிரபந்தங்கள் கவித்துவ அழகில் உயர்ந்ததாகவும், மொழியில் செறிவானதாகவும், மூலத்தின் உணர்வுகளுக்கு மிக நெருக்கமாகவும் அமைந்துள்ளதை பலர் சுட்டிக்காட்டியுள்ளர்.
Hymns for the Drowning - பரம்பொருளான விஷ்ணுவின் மீது `ஆழ்ந்து` பக்திகொண்ட ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்தில், இந்த புத்தகத்தில் நம்மாழ்வாரின் தேர்ந்தெடுத்த பாசுரங்களை மட்டும் ஆங்கிலத்துக்கு மாற்றியுள்ளார். ஓசை நயம் மாறாமல், பொருள் சார்ந்த மயக்கங்களுக்கு இடம் கொடுக்காமல் அமைந்திருப்பதால் பெரும் கவிதை அனுபவத்தை இந்த மொழியாக்கம் நமக்கு அளிக்கிறது. இவற்றை வெறும் மொழியாக்கம் எனச் சொல்லமுடியுமா? ஒரு வகையில், தமிழின் செறிவான சங்கப்பாடல்களையும், தமிழரின் பண்பாட்டு குறியீடுகளையும், பாரதப் புராணங்கள் இதிகாசங்களையும் சேர்த்தமைத்து ஒரு பெரும் அனுபவப் பகிர்வாகப் படிப்பவர்களுக்கு அமைந்துவிடுகிறது. அவ்வகையில், இப்பாடல்களைப் படிப்பவர்கள் கவிதை நயத்தில் மட்டும் மயங்குவதில்லை, பண்டைய பாரதத்தின் வாழ்வு முறையும், சமூகத்தின் குறியீடுகளையும் சேர்த்து அனுபவிக்கிறார்கள்.


28 Nov 2012

பட்டினத்தார் - ஒரு பார்வை by பழ.கருப்பையா

 
பட்டினத்தார் - ஒரு பார்வை
ஆசிரியர் : பழ.கருப்பையா
பக்கங்கள் : 102
விலை : ரூ.75
கிழக்கு பதிப்பகம்
 
***
 
பட்டினத்தார். இயற்பெயர் சுவேதாரண்யன். திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெரிய செல்வந்தராகப் பிறந்தவர், தக்க வயது வந்ததும் வாணிபம் செய்வதற்காக கடல் கடந்து அனுப்பப்பட்டார். திரும்பி வந்தவர், தன் சொந்தம் பந்தம் சொத்துக்கள் அனைத்தையும் துறந்து துறவி ஆனவர். பட்டினத்தார் பற்றி முதலில் படித்தது ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ புத்தகத்தில்தான். ஒரு தனி அத்தியாயம் முழுக்க இவரைப் பற்றியே எழுதி அதில் அவரது திருமண வாழ்க்கை, தொழில், பின் துறவு மற்றும் அவர் பாடிய பாடல்கள் என அனைத்தைப் பற்றியும் விளக்கியிருப்பார் கவியரசர். அதைத் தொடர்ந்து மேலும் பட்டினத்தாரைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமென்று வாங்கியதே இந்தப் புத்தகம். ஆனால், படிக்கும்போதே தெரிந்தது, இது பட்டினத்தாருடைய வாழ்க்கை வரலாறு கிடையாது என்பது. பின் வேறென்ன இருக்கிறது இந்தப் புத்தகத்தில்? இது பட்டினத்தாரைப் பற்றி ஆசிரியர் செய்த ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு.

27 Nov 2012

எல்லா நாளும் கார்த்திகை - பவா செல்லதுரை

சிறப்புப் பதிவர் R.கோபி.

ஏதோ விக்ரமன் பட டைட்டில் மாதிரி இல்லை?! நமக்கு விக்ரமன் டைப் படங்கள் பிடிப்பதில்லை. இணையத்தில் எப்போதாவது கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்டு ஒருவரைப் பற்றிக் கொஞ்சம் நன்றாக எழுதிவிட்டாலும் போதும். சம்பந்தப்பட்டவரே வந்து ‘போதும் மாப்ள, நெஞ்சை நக்கிட்ட’ என்றோ மற்றவர்கள் ‘லாலா லாலா லாலா’ என்றோ கருத்தூட்டம் இடுகிறார்கள். நானும் இட்டிருக்கிறேன்:-)

அட, கொஞ்ச நேரம் கூட நல்லதை மட்டுமே நாம் பார்ப்பதில் எவருக்கும் விருப்பமில்லை. நாமும் அடுத்தவரை அவ்வாறு இருக்க விடுவதில்லை. இது நம் பிரச்சனையே அன்றி விக்ரமன் போல உள்ளவர்கள் பிரச்சனை இல்லை.


வேலைக்காரி - அறிஞர் அண்ணா

ஒருமுறை அறிஞர் அண்ணாவை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றுமாறு கல்லூரி ஒன்றிலிருந்து அழைத்திருந்தார்கள். அழைத்தவர் அந்த கல்லூரி நிர்வாகத்தின் தலைவர். அந்தத் தலைவர் அறிந்திராத விஷயம் என்னவென்றால், அவர் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க யாரிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தாரோ அந்தக் குழுவினர் அரசியல் அல்லது பிற காரணங்களுக்காய் அறிஞர் அண்ணாவின்பால் அளவற்ற வெறுப்பைக் கொண்டிருந்தவர்கள். அவர்களின் பின்னால் அந்தக் கல்லூரியில் பெரிய கூட்டமே இருந்தது.

அண்ணா பெரும்பாலும் எழுதி வைத்துக் கொண்டெல்லாம் பேசமாட்டாராம். மேடையேறி மைக்கைப் பிடித்தாரென்றால் மடைதிறந்த வெள்ளமெனத் தன்னால் வருமாம் பேச்சு. 

அப்படிப்பட்ட அண்ணாவை அவமானம் செய்யவேண்டும் என்ற நோக்கில் அண்ணா பேசுவதற்கு மேடையேறியதும் அவரிடம் அழைத்த மக்கள் அவருக்குத் தந்த தலைப்பு, “செருப்பு”. 


26 Nov 2012

ஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்



“பெரும்பாலான இலக்கியங்கள் வாசகனுக்கு மனச் சிதைவையே தருகின்றன”
-    நடராசன் கணேசன்

நிம்மதி என்கிற விஷயம் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. அதுபோலத்தான் மகிழ்ச்சியும் துக்கமும் இன்னபிற உணர்வுகளும். ஆனால் எல்லா உணர்வுகளும் நிம்மதியோடு தொடர்புடையவையாகத்தான் இருக்கிறது. மகிழ்ச்சி என்ற உணர்வே மனதின் நிம்மதியின் வெளிப்பாடுதான். போலவே, நிம்மதியற்றுக் கிடக்கும் இதயம் துக்கத்தில் அல்லாடுகிறது. ஒவ்வொருவரும் இதுதான் தங்களுக்கு மகிழ்ச்சி என அவர்களாகவே முடிவு செய்து வைத்திருக்கின்றனர். பெரும்பாலும் நிரந்தரமான ஒன்றை அடைவது இவர்களுக்கு மகிழ்ச்சி தரவல்லதாகிறது. ஒரு பொருளின், ஒருவரின் நிரந்தரப் பிரிவு சோகத்தைக் கொடுக்கிறது. இவை தாண்டியும் சந்தோஷப்படவும் துக்கப்படவும் பல காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன ஒவ்வொருவருக்கும்.

நாகரிக மாற்றத்தினால் வேகம் என்பது குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கும் நகர வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு எல்லா உணர்வுகளும் ஏறக்குறைய ஒன்றுதான், காரணம் நேரமின்மை. ஆனால் கிராமத்தில் வாழும் மக்கள் அப்படி அல்ல. மாடு கன்றை ஈன்றால் மகிழ்ச்சி. கிராமமே கொண்டாடும். ஆனால், வீட்டில் வளர்க்கும் நாய் இறந்து போனால் ஒருவரும் சாப்பிடாமல் அழுது கொண்டிருப்பார்கள். இப்படியாக கிராம மக்களின் உணர்வுகளைப் பார்த்தவர், உணர்வுகளினிடையே வாழ்ந்தவர், அந்த உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டவர் அதை சரியாக பிரயோகித்திருப்பதே இந்தப் புத்தகம். பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களின் சோகம் பற்றி பேசுகிறது இப்புத்தகம்.

வெகு இயல்பான கதைகள். பெரும்பாலும் அப்படி ஒரு நிலையை நாம் கடந்து வந்திருக்கக் கூடும் அல்லது பார்த்திருக்கக் கூடும். இருந்தாலும் இவர் கதை சொல்லும்போது அந்த சோகம் நம்மையும் ஆட்கொள்கிறது. உயிர்ச்சுனை என்ற கதை அப்படியான ஒன்றுதான். கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுக்கு நீர் ஆதாரம் மிக அவசியமானது. வறட்சியான காலத்தில் மிதமிஞ்சிய உறிஞ்சுதலின் காரணம் கிணறுகள் வற்றி விட போர் போட்டுக் கொள்ளலாம் என முடிவெடுக்கிறார் ஒரு பெரியவர். அவருக்கு இரு மகள்கள். மூத்தவள், பள்ளி ஆசிரியை. அவளுக்கு திருமணமாகி நிதின் என்றொரு மகன். இளையவளுக்கு திருமண செய்ய வேண்டித்தான் போர் போட முடிவெடுக்கிறார் பெரியவர். மூத்தவளிடம் காசு வாங்கி போர் போடுகிறார். காசும் வீணாகி, தண்ணீரும் வராமல் வீட்டிற்கு பெருங்கஷ்டம் ஏற்படுகிறது. அந்த சோகம் நம்மையும் தாக்குகிறது.

இந்தக் கதையில் முக்கியமான அம்சமே பேரன் நிதினை முக்கியமான பாத்திரமாக சித்தரிப்பது தான். குழந்தைகள் கஷ்டப்படுவது யாருக்கும் பிடிக்காத ஒரு விஷயம். கதையின் இறுதியில் காரணம் தெரியாமல் நிதின் அழும்போது வாசிப்பவனின் மனநிலை நிதினோடு ஒன்றி விடுகிறது. இயலாமை வந்து மனம் முழுவதும் அப்பிக் கொள்கிறது. பாத்திரங்கள், கரு, சொல்லப்பட்ட விதம் இவையனைத்துமே வாசகனை வீழ்த்தி விடுகிறது.

வலி, பிரிவு, இயலாமை, ஆற்றாமை, தனிமை, மரணம் என சோகத்தின் காரணிகள் அதிகமிங்கே. இக்காரணிகள் ஒவ்வொன்றையும் ஒரு சிறுகதையாக்கி இருக்கிறார். கிராமத்தின் பின்னணியில் கதையைச் சுற்றி வரும் புனைவு கதைகளின் தாக்கத்தை ஆழமாக்குகிறது. கதாபாத்திரங்களின் ஆக்கம் உண்மைத் தன்மையை அதிகர்க்கிறது. இறுதியில் ஒருதுளி துயரம் எனுமொரு கதை மனித உறவுகளைக் கொண்டாடி வாழ்வின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. திருமண ஆசையற்று இருக்கும் ஒரு கால் ஊனமான பெண். அவளை நேசித்து ஒருவன் மணக்கிறான். திருமணத்தில் வரும் மொய் பணத்தை நண்பன் ஒருவன் அபகரிக்கிறான். அவனுக்கு கொடுக்க வேண்டிய பணம் தான் என்றாலும், திருமணத்திற்காக பலரிடம் கைமாற்றலாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க இயலாத படியால் அவன் தற்கொலை செய்து கொள்கிறான். கணவனை இழந்தவள் அவன் நண்பனிடத்தே சென்று வாதிடுகிறாள். அவனோ இன்னும் பாக்கி இருபதாயிரம் எனக் கூறி பேச்சை முடிக்கிறான். கணவனை இழந்தவள், அவன் இறப்புக்கு காரணமான நண்பனுக்கு மீதியைத் தந்திருக்கத் தேவை இல்லைதான். இருந்தாலும் சில மாதங்களுக்குப் பிறகு கணவனுக்கு அவப்பெயர் கூடாதென மீதியைத் தந்து வெளியேறுவதாய் கதை முடிகிறது.

புத்தகம் நெடுக சோகம்தான் என்றாலும், அதை ஒவ்வொருவரும் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் அம்மாதிரியான மக்களின் வாழ்வியலையும் உணர்த்துகிறது. 

சிறுகதைத் தொகுப்பு | சு.வேணுகோபால் | ரூ. 60 | தமிழினி பதிப்பகம்
இணையத்தில் வாங்க : கிழக்கு


Related Posts Plugin for WordPress, Blogger...