A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

17 Oct 2012

இன்னும் சில சிந்தனைகள் - சுஜாதா



இன்னும் சில சிந்தனைகள்
ஆசிரியர் : சுஜாதா
உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்:143
விலை: ரூ. 85

அம்பலம் இணையதளத்திற்காக வாராவாரம் சுஜாதா எழுதிய கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு இது. ஜனவரி 2005லிருந்து, ஆகஸ்ட் 2006 வரையிலான கட்டுரைகள் - மொத்தம் 69. சுஜாதாவின் கட்டுரைகள்னு சொன்னாலே, பற்பல விஷயங்களை தொட்டிருப்பார்னு தெரியும். அதே போல் இந்த புத்தகத்திலும், ஆழ்வார்கள், சினிமா, தொலைக்காட்சி, யாப்பு, சமகால இலக்கியம் என்று எல்லாவற்றைப் பற்றியும் கட்டுரைகள் உள்ளன.

தன் விரிவான வாசிப்பிலிருந்தும், அனுபவத்திலிருந்தும் சுஜாதா நமக்குத் தந்திருக்கும் இந்த கட்டுரைகள் நமக்கு பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துகின்றன. ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் அவரின் நகைச்சுவை மூலமாக புதிய பரிமாணத்துடன் தெரிய வருகின்றன. கடினமான தொழில்நுட்பங்களை எளிய தமிழில் அறிந்துகொள்ள இந்த கட்டுரைகள் உதவுகின்றன.

பல தலைப்புகளில் கட்டுரைகள் இருப்பதாலும், அனைத்தையும் இங்கே பார்க்க முடியாது என்பதாலும், மிகச்சில தலைப்புகளை மட்டும் சுருக்கமாக பார்ப்போம்.

ரியாலிட்டி ஷோ

நம்ம தொலைக்காட்சிகளின் ரியாலிட்டி ஷோக்களில் நடத்தப்படும் போலிச் சண்டைகள் / நாடகங்களைப் பற்றி சொல்லிவிட்டு, அவருக்கே ஏற்பட்ட ஒரு அனுபவத்தை சொல்லி சிரிக்க வைக்கிறார். ஒரு முறை மதன், சுஜாதாவுக்கு புத்தகங்கள் அடங்கிய ஒரு பெட்டியை பரிசாக அளிக்க, அதை சுஜாதா திறக்கும்போது படம்பிடிக்க தொலைக்காட்சியினர் வந்திருந்தனர். சுஜாதாவை போலியாக ஆச்சரியப்பட்டு, பெட்டியைத் திறந்து பார்க்குமாறு சொல்ல, இவரும் அதே போல் ‘நடித்து’ கொடுத்தாராம்.

திருவாசகம் ஆரட்டோரியோ

திருவாசகம் ஒலி வெளியீட்டு விழா பற்றி இரு கட்டுரைகள். அந்த விழாவில் பேசிய பிரபலங்கள் யாருக்குமே ஆரட்டோரியோ பற்றிய அனுபவம் இல்லாததால், சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதையோ பேசினார்கள் என்ற பகடியுடன் துவங்கி, கூட்டம் நிறைந்திருந்த ம்யூசிக் அகாடமியில் இளையராஜாவின் இருபது நிமிட ஆரட்டோரியோவில் மக்கள் ஒரு சின்ன சத்தமும் இன்றி ரசித்ததே அவருக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு என்று சொல்லி முடிக்கிறார்.

தேர்தல்

அந்த காலகட்டத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றிருப்பதால், அதைப் பற்றி சில கட்டுரைகள் எழுதியிருக்கிறார். வேட்பாளர்களை பிடிக்குதோ, இல்லையோ, ஓட்டு போடாமல் இருக்கக்கூடாது என்று பார்த்தவர்களையெல்லாம் வற்புறுத்திய இவரது தொகுதியில் இரு நடிகர்கள் நின்றார்களாம். எஸ்.வி.சேகர் மற்றும் நெப்போலியன். இவர்களுக்கு போடாமல் ஐ.ஐ.டி படித்தவர்கள் யாரேனும் நின்றால் ஓட்டு போடலாமென்றால், அப்படி யாரும் இல்லை, ஆகவே காசு சுண்டிப் போட்டுதான் முடிவெடுக்க வேண்டும் என்று எழுதுகிறார்.

EVM

இந்தியத் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வடிவமைப்பில் சுஜாதாவும் பங்கேற்றிருந்ததால், அதைப் பற்றியும் ஒரு பதிவு இருக்கிறது. இயந்திரத்தின் தொழில்நுட்பத்தை விளக்கிவிட்டு அதிலிருக்கும் பிரச்னைகளைப் பற்றியும் கோடிட்டு காட்டியிருக்கிறார்.

புதுமைப்பித்தன் & சுந்தர ராமசாமி

புதுமைப்பித்தனைப் பற்றி ஒரு விரிவான அறிமுகம் கொடுத்துவிட்டு அவரின் படைப்புகளில் அனைவரும் படிப்பதற்காக ஒரு பட்டியலைக் கொடுக்கும் அதே சமயத்தில், சுந்தர ராமசாமியைப் பற்றியும் ஒரு தனி கட்டுரையை கொடுக்கிறார். கனடாவின் இயல் விருது கிடைத்த சுராவிற்கு, சாகித்ய அகாடமி விருது கிடைக்கவில்லை; அதனால் இழப்பு அகாடமிக்கே என்று முத்தாய்ப்பாக முடிக்கும் முன், அவரின் எழுத்துலக வாரிசாக பலர் விண்ணப்பம் போட்டிருப்பதைப் பற்றியும் பகடி செய்கிறார்.

சுஜாதாவின் 70வது வயதின் பிறந்த நாள் கட்டுரையை யாராலும் மறக்க முடியாது. அந்தக் கட்டுரை எழுதியபின் அவருக்கு வந்த தொலைப்பேசி அழைப்புகள், விசாரிப்புகளைப் பற்றியும் நகைச்சுவையுடன் குறிப்பிடுகிறார். பலர் உணர்ச்சிவசப்பட்டு அவர்களின் வயதை இவருக்கு தந்துவிடுகிறேன் என்றதும், தமிழின் மிகப் பிரபலமான க்ளிஷேவான ‘வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்’ என்றதையும் அன்று மட்டும் பல முறை கேட்க நேரிட்டதாகவும் சொல்கிறார்.

இதைத்தவிர, கணிணி, ரெட்ஹேட் லினக்ஸ் பற்றி விளக்கும் தொழில் நுட்பக் கட்டுரைகளும் உள்ளதால் இந்தப் புத்தகம் பாதுகாத்து, படிக்க வேண்டிய ஒன்றேயாகும்.

***



2 comments:

  1. சுருக்கமான அறிமுகத்திற்கு நன்றி...

    ReplyDelete
  2. அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...