A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

9 Oct 2012

இது ராஜபாட்டை அல்ல - சிவகுமார்


நடிகர் சிவகுமாரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் புத்தகம். குறிப்பாக அவரது சினிமா வாழ்க்கையின் நாற்பதாண்டு கால நெடிய வரலாறு. யாரும் சொல்லாத அற்புத கருத்துகளைச் சொல்லியிருக்கிறார் என்றோ புதிதாக ஏதோ சொல்லுகிறார் என்றோ சொல்ல மாட்டேன். மிகவும் எளிமையாகத் தன் வாழ்க்கையில் நடந்தவற்றை உள்ளது உள்ளபடி மிக யதார்த்தமாக அவர் எழுதி இருப்பதுதன் இந்தப் புத்தகம் நம் மனதை எளிதாகக் கவர்ந்து விடுவதன் காரணம். சத்தியசோதனையை ரசித்தவர்கள் நிச்சயம் இந்த புத்தகத்திலும் அதன் பிரதிபலிப்பை உணர்வார்கள் என்று நான் சொன்னாலும் அது மிகையில்லை.

சம காலத்திய மனிதர்களை ஒரு கலைஞனாக பாராட்டுகின்ற மனப்பாங்கு, தனக்கு நல்லது செய்தவர்களிடம் இருக்கின்ற நன்றி கடன், தமிழ் மீது கொண்டுள்ள அளவில்லாத பற்று, தொழில் மீது பக்தி,தனக்கு தீங்கு நினைத்தவர்களின் முகத்திரை கிழிக்கிறேன் பேர்வழி என்று பகிரங்கமாக சொல்லாமல் அவர்களிடமும் கற்ற விசயங்களை மட்டும் நினைவு கூர்ந்து சொல்லும் சபை நாகரிகம், அவர்கள் பெயர்களையும் நாசூக்காகத் தவிர்த்த கண்ணியம் என சிவகுமாரின் மேலான குணங்களைப் புத்தகம் நெடுகிலும் நாம் காணலாம்.

நடிகர். சிவாஜி கணேசன் மீது தீராத ப்ரியமும் மதிப்பும் கொண்டவர் சிவகுமார். சிவாஜியே ஒருமுறை "சிவா !உன்னை யாராலும் வெறுக்க முடியாதுடா” என்று மனம் நெகிழ்ந்து புகழப்பட்டவர் அல்லவா இவர். எவ்வளவுவிஷயங்கள் தெரிந்தாலும் அதை தன்னடக்கத்தோடு சொல்கிற போதுதான் அது மனதைத் தொடுகிறது. சிவகுமாருக்குள் ஒளிந்திருக்கும் ஓவியர் புத்தகம் முழுக்க காட்சி தருகின்றார். அத்தனை ஓவியங்களும் ஆழ்ந்து ரசிக்கத்தக்கவை.

தொழில்முறைப் போட்டி இருந்தும் சக நடிகர்களிடம் பொறாமையின்றி அனைவருடனும் இணக்கமாக இருப்பது எந்தக் காலகட்டத்திலும் சாதாரண விஷயம் அல்ல. அந்த விஷயத்திலும் சிறந்தவராக விளங்கியவர் சிவகுமார்.

புகழ் என்ற ஒற்றை விஷயத்தைச் சுற்றித்தான் இங்கே நம்மில் பலர் உழல்கிறோம். அந்தப் “புகழ்” என்ற மாயை பற்றி சிவகுமார் வைக்கின்ற விமர்சனம் / பார்வை அவரை யதார்த்தத்தை உணர்ந்த உயர்ந்த மனிதன் என்றே எண்ண வைக்கிறது. தன் சாதனைகளை சாதரணமாகவும் தவறுகளை சிரம் தாழ்த்தி உள்ளார்ந்த வருத்ததோடும் ஒப்புவிக்கின்ற குணத்திற்கு நிச்சயம் வைக்கலாம் ஒரு வணக்கம்.

ஒரு நடிகனின் வாழ்க்கைக் குறிப்பாக மட்டும் முடிந்து விடாமல் ஒரு நாற்பதாண்டு காலத்தின் தமிழ் சினிமா உலகத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது புத்தகம். சினிமா என்ற தொழில் அன்றைய காலகட்டத்தில் எப்படி இருந்தது, நடிக நடிகையர் எப்படி ஒவ்வொரு விசயத்திலும் ஆழ்ந்த அறிவைக் கொண்டு இருந்தனர், அந்த காலம் எப்படிப்பட்ட மனிதர்களையும் தொழிலை நேசிக்கின்ற பல மாமேதைகளையும் உள்ளடக்கிய பொற்காலமாக இருந்திருக்கிறது என்பதை சுருக்கென்று சொல்லியிருக்கிறார் சிவகுமார். சினிமா உலகில் எதிர்வரும் சந்ததியினர் நிச்சயம் அறிந்து உணர வேண்டிய தகவல்கள் அவை.

புத்தகத்தைப் பாராட்டி கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தாலும், முத்தாய்ப்பாய் மனதில் ஆழமாக பதிந்த அவருடைய வரிகளை மட்டும் இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன்.
"எதுவும் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்ற இந்த சினிமா துறையில் இத்தனை காலம் ஒழுங்காய் வாழ்ந்திருக்கிறேன் என்பதே என் சாதனை என்பதை நினைக்கும் பொழுது மனதுக்குள் இதமாக ஒரு சுகம் பரவுகின்றது"


உண்மைதானே? சந்தர்ப்பமே கிடைக்காமல் தவறு செய்யாமல் இருப்பவனை விட பல சந்தர்ப்பங்கள் வலிய வளையவரும் சூழலில் மனஉறுதி இழக்காமல் இருப்பது வீரம் என்று படித்திருக்கிறேன்.

நிச்சயம் பல இளைஞர்களுக்கு வழிகாட்டி இவருடைய வாழ்க்கை.

3 comments:

  1. நானும் இந்த புத்தகத்தை விமர்சனப் பாங்கில் எழுதி இருக்கேன். ஆனால் உங்கள் விமர்சனம் எப்படி எழுத வேண்டும் என்று கற்று தந்தது?

    ReplyDelete
  2. ..."எதுவும் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்ற இந்த சினிமா துறையில் இத்தனை காலம் ஒழுங்காய் வாழ்ந்திருக்கிறேன் என்பதே என் சாதனை என்பதை நினைக்கும் பொழுது மனதுக்குள் இதமாக ஒரு சுகம் பரவுகின்றது...

    //எப்ப பார்த்தாலும் சினிமாப் பெண்கள் அனைவரும் அனைவருக்கும் வலை விரித்து இருந்தது போலவும் இவர் சுத்த சுயம்பு யோக்கிய‌ர் என்பது போலவும் மார்க்கெடிங் செய்யப்படுவது கடுப்பாக உள்ளது யவர் ஆனர்// அதே!

    இதுக்கு பின்னாடி இருக்கிற அபத்தமும் இவர் கூட யாரெல்லாம் எந்த புள்ளியில் கடக்க நேர்ந்ததோ அவர்களுக்கெல்லாம் பெரிய அவமானத்தை தேடித்தருகிறோம் (அதுவும் நடிகைகளுக்கு) என்று உணர்ந்தால் இந்த பேச்சு தடை பட்டு போய்விடும்.

    மேலும் தான் சார்ந்து போஜனம் செய்த சினிமாத் துறையே ஒரு சாக்கடை என்ற அளவிலேயே இவர் பேசித் திரிவதை எப்படி மற்றைய சீனியர் பெண் ஆர்டிஸ்டுகள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஸ்ரீப்ரியாவை விட்டு இரண்டு தாங்கு தாங்கச் சொன்னால் எல்லாம் சரியாகி விடலாம்.

    பாவம் இவர் வீட்டுப் பெண்கள்! :D பையன் மார்கள் பெரும் சிலுவையை சுமந்து திரிகிறார்கள் என்றும் தெரிகிறது.

    ReplyDelete
  3. பசங்களை (குழந்தைகளை) எப்படி வளர்த்துள்ளார் என்பதே முக்கியம்... - இது இவருக்கு மட்டுமல்ல-அனைவருக்கும்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...