A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

20 Apr 2013

ஸ்ரீரங்கத்துக் கதைகள்- சுஜாதா


ஸ்ரீரங்கத்துக் கதைகள்
சுஜாதா
உயிர்மை
Photo Courtesy/To buy:NHM


ஆம்னிபஸ்சில் மறுபடியும் சுஜாதா எழுதின புத்தகம். 

போன வாரம் ரொம்ப உக்கிரமான வாரம் - வெயில் பற்றிச் சொல்லவில்லை. என்னுக்குள் ஏகப்பட்ட கேள்விகள், அதிலும் இருத்தல் பற்றிய கேள்விகள். இத்தனைக்கும் என்னுடைய வாழ்வில் மிக முக்கியமான தேவைகள் எல்லாம் நிறைவேறியுள்ளன. ஆங்காங்கே சின்னச்சின்னதாய்  நிறைய தோல்விகள், ஏமாற்றங்கள். எல்லாம் என்னுடைய முடிவுகள், என்னுடைய தவறுகள். இது அவ்வபோது எழும் Existential crisisதான். சென்ற வாரம் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. 

வருடபிறப்புக்கு ஊருக்கு செல்லும்போது, இந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்று படித்தேன். இந்த சுயபுராணத்துக்கும் புத்தகத்திற்க்கும் இருக்கும் ஒரே தொடர்ப்பு சொந்த ஊர் நினைவுகள். அதுவும் சின்ன வயதில் இருக்கும்போது இருந்ததுபோல் இல்லாமல் இப்போது வேகமாகவே மாறி வரும் ஊர்.  நம் ஊர் நம்மிலிருந்து அந்நியப்படும்போது நாமும் எங்கோ அழிந்துக் கொண்டே வருகிறோம் என்கிற பயமும் அதிகமாகி விடுகிறது.





“ஸ்ரீரங்கத்துக் கதைகள்” என்ற இந்த தொகுப்பில் மொத்தம் 34 சிறுகதைகள் காலவரிசைப்படி தொகுப்பட்டுள்ளன. இதில் முதல் கதை 1974லும் கடைசி கதை 2003லும் எழுதப்பட்டுள்ளது. முன்னுரையில் சுஜாதா இந்த கதைகளைத் தனிப்பட்ட சிறுகதைகளாகப் படிக்கச் சொன்னாலும், கதைத் தொகுப்பை மொத்தமாகப் படிக்கும்போது ஏற்படும் உணர்வுகள்... உணர்வுகள், அவ்வளவே.

நாஞ்சில் நாடனுக்கு அவர் வாழ்ந்த நாஞ்சில் நாடு அவரது கதைகளின் கதை களம், ஆர்.கே நாராயணுக்கு மால்குடி, கி. ராஜநாரயணனுக்கு கோபல்ல கிராமம். அதுபோல சுஜாதாவுக்கு ஸ்ரீரங்கம். தனது இளவயது ஞாபகங்கள் அந்த ஊரின் நகர வளர்ச்சியில் அழிந்து வந்தாலும் தனது காலத்தில் இருந்த நினைவுகளை ஒரு template ஆக வைத்துக் கொண்டு இந்தக் கதைகளைப் புனைந்திருக்கிறார். 

என்னைப் பொறுத்தவரை இந்தக் கதைகளுடன் நம்மைக் கண்டிப்பாகப் பொருத்திப் பார்க்க முடியும், எதாவது ஒரு கதையிலாவது நம் பிம்பம்த்தைக் காண முடியும். நகர வாழ்வில் இருந்துவரும் மக்களுக்கு இந்தக் கதைகள் கொஞ்சம் அந்நியமாக இருந்தாலும், அவர்களும் இந்த கதைகளின் உத்தியை ரசிக்க முடியும். 

கதைகள் மூலம் நாம் அறிந்துகொள்வது என்ன ? மனித மனதின் நிலையாமை, அதன் கோபம், பாசம், துரோகம், நட்பு இன்ன பிற. இது எப்போதும் மாறுவது இல்லை, இல்லையா? இந்த எல்லா கதைகளிலும் ஒ.ஹென்றித்தனமான முடிவு இருந்தாலும், அது கதைக்கு சுவாரசியம் கூட்டுகிறதேயன்றி, கதையை இழுத்து நிறுத்த முற்படுவதில்லை. இந்தக் கதைகளின் மாந்தர்களை நாம் கண்டிப்பாக நிகழ்கால வாழ்வில் பார்க்கலாம் - என்ன கொஞ்சம் கூடக்குறைய இருக்கலாம்.

“ராவிரா” கதையில் மனைவியின் துரோகத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் ராவிரா ஆகட்டும், “திண்ணா” கதையில் சிறு வயது முதல் பாசுரம் படித்து சொற்பொழிவு நடத்தும் “திண்ணா” கடைசியில் சினிமாவில் production-in-charge ஆக போவதாகட்டும், எல்லாம் காலத்தின் கட்டாயமல்லாமல் வேறு என்ன? 

“சேச்சா” கதையில் மனிதனின் நிலையாமை பற்றி பேசுகிறார். ஏழை குடும்பத்தில் இருந்து வரும் சேச்சா, நன்றாக படித்து வேலைக்கு வருகிறார். ஆனால் அவரின் தந்தையை போலவே, மிக இளவயதில் இறந்து விடுகிறார். “குடுமி” கதையில் யார் வற்புறுத்தியும் தனது குடுமியை எடுக்க மறுக்கும் ராகவன், இதனால் அமெரிக்கா போகும் வாய்ப்பை இழக்கிறான். ஆனால் மனம் தளராமல் குடுமியை எடுக்க மறுக்கிறான். அதே சமயம் தன்னுடைய காதலான கணிதத்தை விடாமலிருக்கிறார்.

இந்தக் கதைகளில் சுஜாதாவின் பாட்டியும் ஒரு அங்கமாக தொடர்ந்து வருகிறார். இதில் இரு கதைகள், “மறு” கதையில் காசைத் திருடிவிட்டு அதை மறைத்து விடுகிறார். பாட்டியின் கடைசி காலத்தில் அவரிடம் மன்னிப்பு  கேட்கிறார். அதே மாதிரி “காதல் கடிதம்” கதையில் சுஜாதா எழுதாத கடிதத்துக்கு (காதல்), பாட்டி எப்படி அதில் இருந்து விடுவிக்கிறார், என்பதை விவரிக்கறார். 

இந்த கதைகளில் Calf loveஉம் வருகிறது, விளிம்பு நிலை மனிதர்கள் பற்றியும் வருகிறது. “பாதரசம்” கதையில் பதினொரு வயது பாலகன் இருபத்தியொரு வயது பெண்ணை விரும்புகிறான். அதே மாதிரி “குண்டு ரமணி” கதையில் தனது குழந்தையை இழந்துவிட்டு தெருத்தெருவாக பிச்சை எடுக்கும் குண்டு ரமணியை இந்தக் கதை உக்கிரமாக கடைசியில் விவரிக்கிறது. 

தொகுப்பில் உள்ள கதைகளில் அங்கங்கே திருவாய்மொழியும், ஆழ்வார்கள் விஷ்ணுவை புகழ்ந்து பாடிய பாடல்களும், கதையை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் பெரும் பங்கு ஆற்றுகின்றன. கடைசி சில கதைகளில் சில பாசுரங்கள் கதையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கதைகளைப் படித்துவிட்டு இவற்றில் வரும் இரு வரி பாசுரங்களைப் படித்தால் கதைகளை இன்னும் மிக அருகில் பார்க்க முடிகிறது.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...