A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

11 Feb 2013

மதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் – சுகுமாரன்



மலையாள இலக்கியங்களின் ஒரு முக்கிய அங்கமாகவும், மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களில் மிக முக்கியமானவருமாக இருக்கும் வைக்கம் முகமது பஷீரின் ஒரு குறுநாவல்தான் மதிலுகள். அவர் வைக்க ஆசைப்பட்ட பெயர்பெண்ணின் மணம்’. ஒரு மிகப்பெரும் பரிசை விட சிறிய புன்னகை நம்மை நெகிழ்த்திவிடுவதில்லையா? அதுபோலத்தான் இந்தப் புத்தகமும். மிகச்சிறியது எனினும் ஏற்படுத்தும் தாக்கமும் பாதிப்பும் அதிகம். நானே பூங்காவனமும் பூவும்இது நாவலில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரி, இதுதான் பஷீர். அவர், அவர் சார்ந்த நிகழ்வுகளின் கோர்வை அவ்வளவுதான். அதிலொரு சம்பவம் இந்த மதிலுகள்.

ஒரு போராட்டத்தில் பஷீர் சிறைசெல்ல நேர்கிறது. அங்கு அவர் காணும் வார்டர்களின் அட்டூழியங்கள் பணத்தினால் கைதிகளுக்குக் கிடைக்கும் சௌகர்யங்கள் போன்றவற்றை விவரிக்கிறார். அங்கு யாரும் தன்னளவுக்கு ஈடில்லை என்று நினைக்கிறார். தனக்கான ஒரு ரோஜாத் தோட்டத்தை அங்கு உருவாக்கி, அவைகளுடனும் அங்கிருக்கும் மரங்களுடனும் உறவாடித் திரிகிறார். புரட்சி, போராட்டம் என்றெல்லாம் கடந்து வந்த பாதையை யோசித்துப் பார்க்கையில் ஒரு பெரும் மகிழ்ச்சியொன்றை இழந்ததன் சுவடுகள் அவரை ரணமாக்குகின்றன.

பெண், தான் கடந்துவந்த பாதையில் குறுக்கிடாத ஒரு இன்பமாக அவர் கருதுகிறார். ஒரு பெண்ணின் மணத்துக்காகவும் ஸ்பரிசத்துக்காகவும் ஏங்குகிறார். தினம் தினம் பேருந்திலோ வேறெங்காவதோ பெண்களைப்பார்த்து விட்டு அவர்களைத் தொலைத்துத் தவிப்பதல்ல இந்தத் தவிப்பு. அதுவரை பெண்ணின் மணம் காணாத ஒரு தவிப்பு. பெண்கள் சிறைக்கும் ஆண்கள் சிறைக்கும் இடையே இருந்த ஒரு ஓட்டை அடைக்கப் பட்டிருக்கும் சுவடைக் கண்டு வருந்துகிறார். அப்போது மதிலுக்கு அப்புறத்திலிருந்து ஒரு குரல் கேட்கிறது. மதிலே சாட்சியாக இருவரும் காதலிக்கிறார்கள். முகம்பார்க்காத காதல். ஒரு நேசம். கதையின் நுட்பமான பகுதியே, அந்த இடைப்பட மதிலின் பூச்சலில் பஷீர் அந்தப் பெண்ணின் மணத்தை உணருகிறார். அது, அவர் வளர்க்கும் ரோஜாக்கூட்டங்களின் மணத்தை விட அவருக்கு மகிழச்சி தரக்கூடியதாக இருக்கிறது.

அவள் பெயர் நாராயணி, அவளுக்கு ஒரு ரோஜாச்செடியைப் பரிசளிக்கிறார். அது மதிலுக்கு அப்பால் நன்றாக வளர்கிறது இவர்களின் காதலைப்போல. தன்னை விரும்புகிறவன் தன்னைத்தான் விரும்புகிறானா இல்லை தன் நிலையில் யார் இருந்தாலும் விரும்புவானா என்றறிய விரும்புகிறாள். தானொரு அழகியில்லை, தானொரு அதிர்ஷ்டமற்றவள் என்றெல்லாம் கூறுகிறாள். எல்லாப் பெண்களையும்போல தன்னை விரும்புபவனை இழக்க விரும்பாத ஒரு மனம். இறுதியில் இருவரும் சிறைக்குள் ஓரிடத்தில் சந்திக்க முடிவெடுக்கிறார்கள்.

வேதனையின் துளிகளால் நாவல் முடியும்போது ஒரு துன்பத்தின் நிழலை மனதில் பரப்பி விடுகிறது. விரும்பிய ஒரு பொருள் கிடைக்காமல் போகும்போது ஏற்படும் துக்கத்தை பிரதிபலிக்கிறது இந்த நாவல். மொழிபெயர்ப்பு அவ்வளவு உவப்பாக இல்லையென்றாலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவல்லதாக இருக்கிறது கதை. இதை ஒரு சினிமாகவும் அடூர் கோபாலகிருஷ்ணன் எடுத்திருக்கிறார். வெறும் 52 பக்க ஒரு குறுநாவல் ஒரு வெற்றிச் சித்திரமாக ஆனதில் அடூருக்கு இருந்த சோதனைகள் என்னென்ன என்பதை அவர் ஒர் பேட்டியில் சொல்லியிருக்கிறார். அது பின்னிணைப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் பெரும் சவாலாகக் கருதியது பஷீரை திரையில் பிரதிபலிக்கத்தான். அந்த திரைக்காவியம் யூ-ட்யூபில் கூட காணக் கிடைக்கிறது.

குறுநாவல் | மொழிபெயர்ப்பு | காலச்சுவடு | பக்கங்கள் 70 | விலை ரூ. 50
இணையத்தில் வாங்க: உடுமலை

1 comment:

  1. கேள்விப்பட்டிருக்கிறேன்! உங்கள் விமர்சனத்தைப் படித்ததில் முதலில் புத்தகதைப் படித்துவிட்டு பிறகு படத்தைப் பார்ப்பது நல்லது போல் தெரிகிறது

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...