A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

8 Jan 2013

எம்.எஸ். - வாழ்வே சங்கீதம்: வீயெஸ்வி

முதலில் இரண்டு கேள்விகள்: 

1) எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய குறையொன்றுமில்லை பாடலை இயற்றியவர் யார்? “ராஜாஜி?” யூ ஆர் ரைட். ஆனால் கேள்வி அது இல்லை. தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கும் அந்தப் பாடலுக்கு மெட்டு அமைத்தவர் யார்?

2) எம்.எஸ். என்றே பிரபலமாக அழைக்கப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமியின் பெயரில் இருக்கு “எம்.எஸ்” என்பதன் விரிவாக்கம் என்ன?

பதில்களைக் கடைசியில் பார்க்கலாம்.

ம்.எஸ். என்ற மாபெரும் ஆளுமையின் இசைப் பயணம் ப்ளஸ் அவரது வாழ்க்கைப் பயணம் இரண்டையும் பேசும் ஒரு சுருக்கமான, சுவாரசியமான புத்தகம் வீயெஸ்வி எழுதியுள்ள “எம்.எஸ். வாழ்வே சங்கீதம்”. எம்.எஸ்’சின் அதி தீவிர அபிமானிகளை டார்கெட்டாக வைத்து வெளி வந்திருக்கும் புத்தகம். அழகான கதை நடையில் சம்பவங்கள் கோர்க்கப்பட்டதொரு 141 பக்கப் புத்தகம்.




எம்.எஸ். பற்றி இரண்டு வகையான கருத்து உடைய மக்களை இங்கே நாம் காணலாம். அங்கேயிங்கே படித்தவைகள், ஒன்றிரண்டு பிரபலப் பாடல்களைக் கேட்டதை வைத்து அவரைப் பெரிய ஆதர்சமாகக் கொள்பவர்கள். எங்கேயோ எதையோ வாசித்துவிட்டு அல்லது செவி வழியாகக் கேட்டுவிட்டு தூஷிக்கும் சிலர். இந்த இரண்டு தரப்பினருக்குமே உண்மையான எம்.எஸ். யார் என்று தெரியாது என்பது திண்ணம்.

அடுத்து.... 

இந்தத் தலைமுறையினருக்கு (என்னையும் சேர்த்து), எம்.எஸ்.’சின் உண்மையான சங்கீத பலம் சரியாகத் தெரியாது என்பது என் அனுமானம். எம்.எஸ். குரலில் பிரபலமான பாடல்களை வரிசைப்படுத்தக் கேட்டால் பஜ கோவிந்தம்,  வேங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம், குறையொன்றுமில்லை, காற்றினிலே வரும் கீதம், பாவயாமி ரகுராமம் தாண்டி ஏதும் எனக்குத் தெரியாது.

லலிதா ராம் இந்தக் கட்டுரையில் அதைப் பற்றி விரிவாகவே பேசுகிறார். இது தவிர்த்து லலிதாராம் பேசும் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.

கீர்த்தனைகள் பாடும் பொழுது, ஒரே வரியை பல முறை வேறு வேறு விதமாகப் பாடுவார்கள். இதற்குச் சங்கதிகள் என்று பெயர். இந்த சங்கதிகளை ஒரு நல்ல பேட்ஸ்மேனின் திறமைக்கு ஒப்பிடலாம். ஒரு கிரிக்கெட் மேட்ச் நடக்கிறது, ஒரு திறமையான பேட்ஸ்மேன் ஒரு சுழற்பந்து வீச்சாளரை சந்திக்கிறார். முதல் பந்து 'குட்-லெங்ந்தில்' விழுகிறது, நமது பேட்ஸ்மெனின் கால்கள் பந்தை நோக்கி துரிதமாகச் சென்று மிட்-ஆனுக்கு மேல் பந்தைத் தூக்கி அடிக்கின்றன. விளைவு - 4 ரன்கள். அடுத்த பந்தும் அதே இடத்த்ல் விழுகிறது, ஆனால் இம்முறை லாங்-ஆனில் ஒருவர் இருக்கிறார். நமது ஆட்டக்காரர் சற்று நகர்ர்ந்து காலியாக இருக்கும் 'பாயிண்ட்' திசையில் 'கட் செய்கிறார். விளைவு - 4 ரன்கள். இம்முறை டீப்-பாயிண்ட் இருக்கிறது, பந்து அதே இடத்தில் விழுந்து வருகிறது, பேட்ஸ்மேன் பந்து தன்னை கடக்கும் வரைக் காத்திருந்து, விக்கட்-கீப்பரின் கையுரையில் செல்லும் முன் செல்லமாக தடவிக் கொடுப்பது போல பந்தை லேட்-கட் செய்கிறார். விளைவு - 4 ரன்கள்.
எப்படி ஒரே பந்தை வெவ்வேறு விதமாக பவுண்டரிக்கு அனுப்பி, தன் திறமையின் பரிமாணங்களை பேட்ஸ்மேன் வெளிப்படுத்தினாரோ, அதே போல, ஒரு ராகத்தின் பல பரிமாணங்களை வெளிக்கொணர்வதே சங்கதிகளின் வேலை. காம்போஜி ராகக் கிருதியான 'ஓ ரங்க சாயி' என்ற பாடலின் பல்லவியை எம்.எஸ் பாடும் விதத்தைக் கேட்டால், நான் கூறிய 'cricket analogy' புரியும். 'ஓ ரங்கசாயி' என்ற வரியில் 'ஓ' என்ற சொல் (எழுத்து) மட்டும் இரண்டு களை ஆதி தாளத்தின் 3 இடங்களுக்கு வரும். அந்த ஒரு எழுத்தை முதலில் காம்போஜியின் சில ஸ்வரங்களில் மட்டும் பாவவிட்டுப் பாடுவார். அடுத்த சங்கதியில் முன்னல் பாடிய ஸ்வரங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று அன்புடன் அணைத்துக் கொள்ளும். அடுத்த சங்கதியில் வேறு சில ஸ்வரங்கள் சேர்ந்து கொள்ளும். அடுத்த சங்கதியில் காம்போஜியின் மொத்த உருவம் லேசாக பவனி வர ஆரம்பிக்கும், இப்படி படிப்படியாய் வளர்ந்து வளர்ந்து, 'ஓ ரங்க சாயி' என்ற வரி சில மின்னல் வேக ப்ருகாக்களுடன் காம்போஜி ராகத்தை ரோலர் கோஸ்டரில் இட்டுச் செல்லும். பேட்ஸ்மெனின் ஒவ்வொரு அடியும் எப்படி பவுண்டரியில் முடிந்ததோ அதே போல எம்.எஸ்-இன் சங்கதிகள் எத்தனை எத்தனை இருப்பினும் அவற்றின் விளைவு, கேட்பவர் மனத்தில் மகிழ்ச்சிதான்.....
.....அனைத்திந்திய அளவில் புகழ் பெற்றிருந்த எம்.எஸ்-இன் படாந்தரத்துக்கு ஈடு இணையாக வேறொருவரைக் காண்பது துர்லபம். இன்றைய நிலையில் அருணாசலக் கவி, முத்துத் தாண்டவர் போன்றோர்க்ளின் பல கீர்த்தனைகளை இழந்து நிற்கும் நமக்கு, எம்.எஸ்-இன் கச்சேரிகளின் திரட்டு ஒரு சிறந்த கருவூலத்தை உருவாக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய அனைத்து மொழிகளிலும் 70 வருடங்கள் பாடி எம்.எஸ் வைத்துச் சென்றிருக்கும் செல்வம், அவர் கச்சேரிகள் செய்து பணமாய் கொடுத்த தானங்களை எல்லாம் மிஞ்சு செல்வமாகும். அதைப் பாதுகாத்தல் நமது கடமை. 

முதல் இரண்டு பத்திகளை நான் இங்கே தந்திருக்கும் காரணம் ”ஒரே வரியைத் திரும்பத் திரும்பப் பாடுதல்” எதற்காக என்று புரியாமல் விழிபிதுங்கும் என்னைப் போன்ற சராசரி இசை ரசிகர்களுக்காக.

மேலே மூன்றாம் பத்தியில் லலிதாராம் குறிப்பிடும் “அவர் கச்சேரிகள் செய்து பணமாய்க் கொடுத்த தானங்கள்”.... ஏதோ இடிக்கிறதா? ”கச்சேரிகள் செய்து சம்பாதித்த” என்றுதானே சொல்லியிருக்க வேண்டும்?  லலிதாராம் சொன்னது சரிதான் என்று வீயெஸ்வி எழுதிய இந்தப் புத்தகத்தைப் படித்தால் புரிந்து கொள்வீர்கள்.

இன்னதிற்கு என்று அல்லாமல் எந்த நல்ல காரியம் என்றாலும் “கொஞ்சம் நிதி திரட்ட நீங்கதான் ஒரு ப்ரோக்ராம் பண்ணித் தரவேணும்” என்று வந்த வேண்டுதல்கள் பலவற்றை நிறைவேற்றித் தந்திருக்கிறார் எம்.எஸ். குறைந்தது அரைடஜன் உதாரணங்கள் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 

வீணை இசைக் கலைஞரான சண்முகவடிவு மகளான எம்.எஸ்., தன் அம்மா பங்கேற்ற மேடையில் முதலில் பாடியதில் துவங்கி, படிப்படியாக அவர் இசைத்துறையில் வளர்ந்தது பற்றி ஒவ்வொரு அத்தியாயமாக சுவாரசியமாக சொல்கிறார் வீயெஸ்வி. 

எம்.எஸ்.’சின் வெற்றிக்கதையில் அவரது கணவர் ‘கல்கி” சதாசிவத்தின் பங்கு மிகவும் முக்கியமானது என்பது உலகறிந்த விஷயம். அதையும் புத்தகம் நெடூக பலப்பல சம்பவங்கள் வாயிலாக மறவாமல் குறிப்பிடுகிறார் வீயெஸ்வி.

எம்.எஸ்.’க்கு இசையுலகில் நேரடி சிஷ்யை / சிஷ்யர் என்று யாரும் இல்லை என்பது பலருக்கு ஒரு பெரும் குறையாகவே தெரிகிறது. இதற்கு ஒரு அழகான காரணம் உண்டாம். தன் இறுதி மூச்சுவரை தன்னை இசையுலகில் ஒரு மாணவியாகவே கருதியவர் எம்.எஸ்., இதுவே அவர் யாரையும் தனக்கு மாணவியாக / மாணவனாகக் கொள்ளாததன் காரணமாம்.


“நான் மதுரை தொகுதியில போட்டியிடறேன். நீங்க ஒரு தடவை  மதுரைல நடக்கற தேர்தல் கூட்டத்துல கலந்துண்டு என்னைப் பத்தி நாலு நல்ல வார்த்தை சொன்னா நல்லா இருக்கும்”, என்று சுப்ரமணியசுவாமி கேட்டுக் கொண்டதும், அதை எம்.எஸ். நாசூக்காக மறுத்திருக்கிறார். இதுபோன்ற  வெளியுலகம் அறியாத சில தகவல்களும் புத்தகத்தில் உண்டு.

புத்தகத்தின் இருபது அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும் இணைக்கப்பட்டிருக்கும் அரிதிலும் அரிதான புகைப்படங்களும் கூட புத்தகத்தை நாம் வாங்க ஒரு முக்கியக் காரணியாகிறது.



கேள்விகளுக்கான பதில்கள்:

1) கடையநல்லூர் வெங்கட்ராமன்

2) ”மதுரை சண்முகவடிவு” - மதுரையைச் சேர்ந்தவர் எம்.எஸ்., அவரது தாயாரின் பெயர் சண்முகவடிவு.

எம்.எஸ்.  - வாழ்வே சங்கீதம்: வீயெஸ்வி
வாழ்க்கை வரலாறு
141 பக்கங்கள் / விலை ரூ. 60/-
இணையம் மூலம் புத்தகத்தை வாங்க: நூலுலகம்
இந்தப் புத்தகம் ஆடியோ புக் வடிவிலும் இங்கே கிடைக்கிறது. (விலை.ரூ. 103/-)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...