A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

27 Aug 2012

தமிழ் மகனின் வெட்டுப்புலி



நாம் அன்றாடம் பயன்படுத்தும், அதிகம் கண்டுகொள்ளாத ஒவ்வொரு பொருளையும் எடுத்து அதைப் பற்றியும், அதன் வரலாறு என்னவாக இருக்கும், அப்பொருள் எப்படி உருவாகியிருக்கும் என்றெல்லாம் யோசிப்போமேயானால், பத்து நிமிடத்தில் மூளை குழம்பி அதைத் தூக்கி மூலையில் எறிந்து விட்டு நிச்சயம் வேறு வேலை செய்யப் போயிருப்போம். ஆனால் தனக்கு அப்படி கைக்குக் கிடைத்த ஒரு தீப்பெட்டியின் மீதிருக்கும் படத்தை ஆராய்ந்ததின் பலனாய், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டின் வரலாற்றை புனைவின் வழி நாவலாய் வடித்திருக்கிறார் தமிழ் மகன்.

தீப்பெட்டியின் மீதிருக்கும் ஒரு படம். ஒரு சிறுத்தையை ஒருவர் வெட்டுவதாக கையை ஓங்கிக் கொண்டிருக்கும் ஒரு சித்திரம். அந்தப் படத்தின் வரலாறைத் தேடிச்சென்று, அதன் வழி தமிழகத்தின் எழுபது வருட மாற்றங்களைக் கண்முன் திரையோடச் செய்கிறது வெட்டுப்புலி.

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பதுகளில் நாவல் தொடங்குகிறது, அந்தப் படத்திலிருப்பவர் வாழ்ந்த இடத்திற்குச் சென்று விசாரிப்பதாய் ஆரம்பிக்கும் கதை நினைவுச் சுருளாய் முப்பதுகளில் மெல்லப் பின்சென்று சிறுத்தையை வெட்டியவர் சின்னா ரெட்டி என்றும், மூலிகை மருத்துவர் போன்றொருவர் என்றும் அவரைப் பற்றியும் முப்பதுகளின் சூழல் பற்றியும் பேசுகிறது நாவல்.

களம் மீண்டும் நாற்பதுகளுக்குத் திரும்பி, வெட்டுப்புலியை விட்டு வெளியே வர தமிழக வரலாறு நகர ஆரம்பிக்கிறது. சாதி பிரிவினைகளின் தாக்கம் பற்றி கூறியிருக்கிறார். மேலும், சுதந்தரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு பற்றியும் சில குறிப்புகள் உள்ளன. ஐம்பதுகளில் தமிழகத்தில் சினிமாத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சியும், திராவிடக் கட்சிகளின் வளர்ச்சி பற்றியும் எழுதியிருக்கிறார். சினிமா மோகமும், சினிமா நடிக்க, எடுக்க மக்களின் ஆர்வமும், சினிமா எடுக்கிறேன் பேர்வழி என்று சுகமாய் குடி கூத்து என அழிந்தவர்கள் பற்றியும் சொல்லியிருக்கிறார். 

காமராஜர், பெரியார் அண்ணாதுரை என்று அரசியலையும், பேன்ட் அணிதல், சிகை திருத்திக் கொள்ளுதல் என நாகரிக மாற்றங்களைம், பார்ப்பனீய எதிர்ப்பையும் பேசுகிறது அறுபதுகள் பகுதி. மீதி முப்பதாண்டுகால நூற்றாண்டு இறுதிப் பகுதி பெரும்பாலும் சினிமா, அரசியல் மற்றும் இரண்டும் சேர்ந்து தமிழகத்தை ஆண்ட பாங்கைப் பற்றியும் சொல்கிறது.

நாவலின் ஒரு மிகப்பெரிய நிறை, ஒரு நூறாண்டு வரலாறை விக்கிப்பீடியாத்தனமாக சொல்லாமல், படிப்பவர்க்கு அயர்ச்சி ஏற்படுத்தாது புனைவின் வழி சுவாரஸ்யமாகச் சொன்னதே. ஒரு தீப்பெட்டிப் படம், அதன் கதையாக இருக்குமென ஆரம்பித்து நாம் எதிர்பார்த்திரா வண்ணம் வரலாறை வியப்பூட்டும் வகையில் சொல்லி நம்மைக் கட்டிப்போடுகிறது புத்தகம். நிச்சயம் படிப்பவர் உணரக் கூடியதான வகையில் வரலாறைச் சொல்கிறது.

முப்பதுகளும், நாற்பதுகளும் ஒரு டாக்குமென்ட்ரி போல மெதுவாகவும் சற்றே அலுப்பூட்டும் வகையிலும் இருந்து, நூற்றாண்டின் பிற்பாதியைக் குறும்படத்தைப் போல அவசர அவசரமாக முடித்திருப்பதே நாவலின் ஒரே குறை. இருந்தாலும், அந்த நீட்டலும் சுருக்கலும் நாம் அவசியம் அறிய வேண்டிய அந்த எழுபதாண்டு கால மாற்றங்கள், நிகழ்வுகள் பலவற்றை இந்தப் புத்தகம் தொட்டுச் செல்ல ஒரு தடையாய் இல்லை. 

சன் டிவியின் திரை விமர்சனக் குழு பாணியில் சொல்ல வேண்டுமெனில், முற்பாதி ஜல்லி, பிற்பாதி கில்லி!

தமிழ்மகன் | நாவல் | உயிர்மை | ரூ. 240 | பக்கங்கள் 375

இணையத்தில் வாங்க: கிழக்கு



1 comment:

  1. 375 பக்கங்கள். இதுதான் பயமா இருக்கு.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...