A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

17 Sept 2012

பசித்த மானிடம் – கரிச்சான் குஞ்சு


தனித்திருத்தலும் விழித்திருத்தலும் பசித்திருத்தலுமே வாழ்க்கை என வள்ளலார் பெருமான் கூறுகிறார். மனித வாழ்வை இயக்கிக்கொண்டிருக்கும் முக்கியக் காரணி பசி. வெறும் வயிற்றுப் பசிக்காக இயங்கிக் கொண்டிருந்த மனித இனம், ஆறாம் அறிவைப் பெற்றுத் தனக்கான வேறு பசிகளை உணர ஆரம்பித்த பின்னரே இந்த பூமியில் இயக்கம் மாறியது. யார் சிறந்தவர் எனும் போட்டி உருவானது, இந்தப் பசிகளுக்கான மருந்து யாரிடம் அதிகம், சிறந்ததாக இருக்கிறது எனும் பொறாமையும் உண்டாகிற்று. மனிதரிடையே உருவான இந்த ஒப்பிடுதல் பண்பு மனிதர்களுக்கே சாபக்கேடாய்ப் போனது. தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் இந்த ஜகத்தினை அழிப்போம் என்றார் பாரதி. ஒரு மனிதனின் பசி அவனை எதுவும் செய்யத் தூண்டும், அது போலத்தான் மனதின் பசியும். ஒரு மனிதனின், அவன் மனதின் பசிகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் எந்த சூழலுக்கும் ஒத்துப்போகும் ஒரு நாவலாய் ”பசித்த மானிடம்” வடித்திருக்கிறார் கரிச்சான் குஞ்சு.


கணேசன், கிட்டா இருவருமே இதில் முக்கிய கதாபாத்திரங்கள். இவர்களுக்குள் வரும் பசி அதனால் வரும் வாழ்க்கை மாறுதல்கள், சிக்கல்கள் இவையாவுமே கதை. கணேசன் ஒரு அநாதை, தோப்பூரில் ஒரு வாத்தியாரால் எடுத்து வளர்க்கப்பட்டு பின்னர் அந்த ஊருக்கே செல்லப் பிள்ளை ஆகிறான். சுகவாசியாய் அன்பும் அக்கறையும் பெற்று இலக்குகள் ஏதுமின்றி, அவன் எதிர்காலம் குறித்து யாரும் சிந்திக்காத நிலையில் வளர்கிறான்.

கிட்டா, கணேசனைக் கண்டு பொறாமை கொண்டு மேலும் அங்கிருக்க பிடிக்காமல் வெளியூருக்குச் சென்று மோட்டார் வாகனம் ஓட்டப் பயில்கிறான். டிரைவர் ஆகி சம்பாதிக்க ஆரம்பிக்கிறான். பணமே முக்கிய இலக்காய் கிட்டாவின் வாழ்க்கை நகர்கிறது. மெள்ள மெள்ள கிட்டாவின் நிலை உயர்ந்து முதலாளி ஆகிறான். இதனால் அதிகாரக் கோரப்பசிக்கு ஆளாகி நிம்மதி இழக்கிறான். மனைவியை சந்தேகப் படுகிறான். வாழ்க்கை தடுமாறுகிறது.

ஒரு கட்டத்தில் கணேசனை படிப்பிற்காக வேறொரு ஊரில் பள்ளியில் சேர்க்க, கணேசன் வாழ்க்கை திசை மாறுகிறது. பணம், சுகம், காமம் இவற்றிற்கு அடிமை ஆகிறான் கணேசன். தன்னை எடுத்து வளர்த்த தோப்பூரையும், வாத்தியாரையும் விட்டு விலகுகிறான். காலப்போக்கில் வாழ்க்கை கணேசனுக்குப் பாடம் புகட்டுகிறது. தன் நிலை உணர்ந்து இவற்றிலிருந்து விலக முடிவு செய்கிறான், இருந்தாலும் செய்த பாவம் தொழுநோயாய் அவனைத் தொடர்கிறது. அனைத்தையும் அனுபவித்தவன், இவை அனைத்தையும் துறந்த பின்னர் அடைவது என்ன? என்பதில் நாவல் முடிகிறது.

பணமும் அதிகாரமும் ஒருவனுக்கு முன் நின்றும், பலவீனமும், தான் இழந்தவைகளும் பின் நின்றும் சிரிக்க இவற்றை உதறியவனே மோட்சம் அடைகிறான். வாழ்வின் நோக்கம் உயிர் கொண்டிருக்கும் ஒரு உடலை மட்டும் மகிழ்விப்பதல்ல எனப்புரிவதே வாழ்வென்றும் அது புரியும் காலத்தில் ஒருவன் முக்திக்கான முதல் படியைத் தாண்டுகிறான் என்றும் ஒரு தரிசனம் தருகிறார் கரிச்சான் குஞ்சு இந்நாவல் வழி. மனதைப் பிடித்து ஆட்டும் பணம், பதவி, பெண் இவையனைத்துமே மாயை என்பதை உணர்ந்தவன் ஞானி ஆகிறான் என்பதே சாராம்சம்.

ரத்தக் கண்ணீர் திரைப்படம் போன்றதொரு நாவல்தான் என்றாலும், வாசிக்கும்போது ஒரு தரிசனம் தரவல்ல ஒரு மிகச்சிறந்த புத்தகம் – பசித்த மானிடம்.


கரிச்சான் குஞ்சு | நாவல் | காலச்சுவடு | பக்கங்கள் 271 | விலை ரூ. 200 

இணையத்தில் வாங்க: கிழக்கு


1 comment:

  1. வாங்கி வாசிக்க வேண்டும்... நன்றி...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...