A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

5 Sept 2012

அள்ள அள்ளப் பணம் - பாகம் ஒன்று - சோம.வள்ளியப்பன்



அள்ள அள்ளப் பணம் - பாகம் ஒன்று
ஆசிரியர் : சோம. வள்ளியப்பன்
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் : 269
விலை : ரூ. 125.

***

* பங்குச்சந்தையில், ஆறு மாத காலத்திற்கு நான் முதலீடு செய்தால், வட்டி என்ன கிடைக்கும்?
* முதலுக்கு மோசம் வராதுதானே?
* இதுக்கு பதிலா நான் நிரந்தர வைப்பு நிதியில் போட்டால், பணம் பத்திரமா இருக்குமே?

பங்குச்சந்தையில் அவர்களது சேவைகள் குறித்து பேசுவதற்காக ஒரு நிதிஆலோசக நிறுவனத்திலிருந்து எங்க அலுவலகத்திற்கு ஒருவர் வந்திருந்தார். பேசினார், பேசினார், பேசிக்கொண்டே இருந்தார். கடைசியில் கேள்வி நேரம். அப்போது சில நண்பர்கள் கேட்ட கேள்விகளே மேலே பார்த்தவை. பேசியவர் ஆடிப் போனார். மறுபடி முதலிலிருந்து துவங்கினார்.

சந்தையைப் பற்றி மிக அடிப்படையான கேள்விகள் பலருக்கு இருப்பது கண்கூடு. பங்குகளை வாங்க/விற்க வேண்டும் என்று ஆசை. ஆனால், ஏதோ ஒரு சிறிய சந்தேகத்தால், அதை செய்ய முடியாமல் தவிப்பு. அப்படிப்பட்ட நபர்களுக்காகவே இந்த புத்தகம் உள்ளது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் பல வகைப்படுவார்கள்.
* காலையில் பணம் போட்டு உடனடியாக (அதே நாளில் அல்லது ஓரிரு நாட்களில்) லாபம் பார்க்க வேண்டும் என்று நினைப்போர்
* ஓரிரு மாதங்களில் லாபம் வரவேண்டும் என்று விரும்புவோர்
* நீண்ட கால முதலீடு செய்பவர்கள்.

இந்த அனைத்து வகையிலும் நன்மை/தீமைகள் இரண்டும் இருக்கிறது. லாப/நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. லாபம் அதிகமில்லை என்றாலும், நஷ்டத்தை எப்படி தவிர்ப்பது?. இதற்கு சந்தையைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்.

* எந்த துறையில், எந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் / விற்கலாம்?
* எந்த விலையில் வாங்கலாம் / விற்கலாம்?
* எதையெல்லாம் வாங்காமல் இருக்க வேண்டும்?
* எதையெல்லாம் விற்காமல் வைத்துக் கொள்ள வேண்டும்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தரவுகள் மூலமாக பதில் சொல்ல வேண்டுமெனில், இந்திய, உலக அரசியல், தொழில் நடப்புகளை / மாற்றங்களை / செய்திகளை தினமும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். எந்த சம்பவத்திற்கு / எந்த செய்திகளுக்கெல்லாம் பங்குகளின் விலை உயரும் / குறையும் என்று ஒரு பெரிய பட்டியலே தந்திருக்கிறார் ஆசிரியர். லாபம் சம்பாதிக்க வழிகளை சொல்வதோடு, நஷ்டத்தை தவிர்க்கவும் பல வழிகளை சொல்லித் தருகிறார்.

சந்தையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று வருபவர்களே இந்த புத்தகத்தை படிப்பார்கள் என்பதால், பல இடங்களில் அவர்களுக்கு மிகவும் தேவையான எச்சரிக்கை விடுக்கிறார். இருக்கிற பணத்தை மொத்தமாக இதில் போட வேண்டாம். ஒரு இலக்கு வைத்துக் கொண்டு அதற்குள்ளாகவே முதலீடு செய்ய வேண்டும். சந்தை, அதன் நெளிவு சுளிவுகள் பிடிபட்ட பின்னர் மெதுவாக முதலீடுகளை அதிகரிக்க முடிவெடுக்கலாம். அதுவரை ஜாக்கிரதையாகவே இருங்கள் என சொல்கிறார்.

இவை எல்லாவற்றிற்கும் முன், பங்குச்சந்தையில் உலவும் பல தொழில்நுட்ப வார்த்தைகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த புத்தகமே சரியான வழிகாட்டி. மளிகைக் கடையையும் பங்குச் சந்தையையும் ஒப்பிட்டு துவங்கும் முதல் அத்தியாயத்திலிருந்து, பங்குகள், பரஸ்பர நிதிகள் இவற்றைப் பற்றியும், காளை & கரடி, சந்தையின் ஏற்ற, இறக்க, மந்த நிலை, நிறுவனங்களின் லிஸ்ட், டீலிஸ்ட் போன்ற ஏகப்பட்ட தகவல்களும் நிறைந்த புத்தகம் இது. நிறுவனம் வெளியிடும்போதே பங்குகளை வாங்கிப் போடும் primary market, வெளிச்சந்தையில் வாங்குவது - இவ்விரண்டின் செயல்பாட்டினை தெளிவாக விளக்கியுள்ளார். Futures, Options, Derivatives போன்ற பல சொற்களை உதாரணங்களோடு அறிமுகம் செய்திருப்பதால் மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

1993ம் ஆண்டு ரூ.9,500க்கு Infosys பங்குகளை ஒருவர் வாங்கியிருந்தார் எனில், 2007ம் ஆண்டு அதன் மதிப்பு எவ்வளவு இருக்கும்? படிக்கும்போதே தலை சுற்றுகிறது. கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய்கள். அதுவே நிரந்தர வைப்பு நிதியில் போட்டிருந்தால் அதன் இன்றைய மதிப்பு ரூ. 50,000 மட்டுமே என்று சொல்லிவிட்டு, இதே உதாரணம் அனைத்து பங்குகளுக்கும் பொருந்தாது என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்.

இன்னும் பற்பல புதிய தொழில்நுட்பச் சொற்கள், உதாரணங்களுடன், பங்குச் சந்தையைப் பற்றி அறிந்து கொள்ள மிகச் சிறந்த கையேடு இந்த புத்தகம் என்று அடித்துச் சொல்லலாம்.

***

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...