A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

13 Nov 2012

ஆசை என்னும் வேதம் - பாலகுமாரன்

சிறப்புப் பதிவர்: R கோபி
.
நீலம் புயலால் தமிழகமெங்கும் மழை. போதாத குறைக்கு எனக்கு ஜுரம் வேறு. வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல இயலாத சூழல். வாசிப்பு மட்டுமே இதுபோன்ற நேரங்களில் நல்ல துணை.

‘ஆசை என்னும் வேதம்’ நாவலை இதற்கு முன்பே ஒருமுறை படித்திருக்கிறேன். இம்முறை திரும்ப வாசித்தபோது புரியாத சில விஷயங்கள் புரிந்தன. நாவலின் கட்டமைப்பு பற்றிய புரிதல் இன்னும் கொஞ்சம் அதிகமாகி இருக்கிறது. 

நாவலில் மேலோட்டமாகத் தெரியும் விதவை மறுமணம், காதல் என்பனவற்றையெல்லாம் தாண்டிக் கசப்பான முதல் திருமணம், அது தந்த ரணங்கள், மனதிற்குப் பிடித்த இன்னொருவருடன் (கோபி) சேர்ந்து இருப்பது என்று முடிவானதும் நாயகி (வசுமதி) தன்னைச் சுற்றி அமைத்துக்கொள்ளும் அரண் ஆகியவை முக்கியமாகப் படுகின்றன.

ஒரு முறை சூடு கண்ட முறை மறுமுறை சர்வ ஜாக்கிரதையாக இருக்கும். 'Leaving no stone unturned' என்பார்கள் ஆங்கிலத்தில். கோபியுடன் சேர்ந்து வாழ்வது என்று முடிவானதும் வசுமதி எடுக்கும் முடிவுகள் மிக முக்கியமானவை.

நாவலில் பாசாங்குகள் இல்லை. பசி, தூக்கம் போன்று உடலுறவு என்பதும் ஒரு முக்கியமான தேவை என்பதைச் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே நாவல் சொல்கிறது. வசுமதியின் மேல் கோபிக்கு ஈர்ப்பு ஏற்பட அவள் அழகாக இருப்பதும் ஒரு முக்கியமான காரணம் என்று அவன் ஒப்புக்கொள்கிறான்.

நாத்தானார் சீதாமணியின் பாத்திரப் படைப்பு பிரமாதம். நாவலைப் படிக்கும்போது ‘இப்படியும் இருப்பார்களா?’ என்று பல சமயம் நம்மை நாமே கேட்டுக் கொள்கிறோம். 
பொதுவாக திரு. பாலகுமாரன் அவர்களின் நாவல்களில் கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த நாவலில் அது கொஞ்சம் குறைவாகப் பட்டது. இந்த நாவல் எனக்குப் பிடித்துப் போக இதுவும் ஒரு காரணம். 

வசுமதிக்குக் கோபியின் மேல் காதல் ஏற்பட மேலும் வலுவான காரணங்களைச் சொல்லி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

வாசகர் ஒருவர் ஆசிரியருக்கு எழுதிய கடிதமொன்றில் ‘ஆசை என்னும் வேதம் என்ற தலைப்புக்கு என்ன அர்த்தம்?’ என்று கேட்டிருந்தார். திரு. பாலகுமாரன் என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை. எனக்கென்னவோ அதற்கான விடையை நாவலிலேயே தேடவேண்டும் என்று தோன்றுகிறது.  
ஆசை என்னும் வேதம் - பாலகுமாரன்
விசா பதிப்பகம்
விலை ரூ. 100
ஆன்லைன் மூலம் புத்தகம் பெற: உடுமலை / 600024.காம்

7 comments:

  1. இந்த புத்தகத்தை பற்றி ஒரு வாசகர்..

    நீங்கள் எழுதிய ஆசை எனும் வேதம் கதையின் முடிவு நன்றாக இருந்தது. ஆனால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படிக் கல்யாணம் செய்து கொள்ளாமல் ஒருவனோடு வாழ, நம் சமுதாயம் ஒத்துக் கொள்ளுமா? நம்மால் சமுதாய மரபுகளை மீற முடியுமா? நீங்கள்சொல்லுகிற இந்த முடிவு நிச்சயம் மலரத்தான் போகிறது. ஆனால் இப்போது அல்ல. அதற்கு நிறைய காலம் தேவைப்படும் என்று நான் நினைக்கிறேன்.

    உங்களுடைய இந்த கதைக்கு பாராட்டோ, புகழோ சொல்லக்கூடாது. இதில் கதை என்பதைவிட, அதில் வரும் சம்பவங்கள்தான் மனதை நெருடியது. சம்பவங்கள் தொடர்பான சிந்தனை மிக அருமை.

    ReplyDelete
  2. @balhanuman, மிக்க நன்றி.

    ReplyDelete
  3. நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி...

    ReplyDelete
  4. @திண்டுக்கல் தனபாலன், மிக்க நன்றி

    ReplyDelete
  5. வைத்திருக்கிறேன். படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. ///ஒரு முறை சூடு கண்ட முறை மறுமுறை சர்வ ஜாக்கிரதையாக இருக்கும். 'Leaving no stone unturned' என்பார்கள் ஆங்கிலத்தில்.///

    இல்லை. Once bitten, twice shy என்பார்கள் .

    ReplyDelete
  7. @ஸ்ரீராம், அப்படியா? நாவல் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்களேன்

    @சரவணன், நீங்க சொல்றது கரெக்ட். ஆனால் 'leaving no stone unturned' என்பதை அதற்கடுத்த வாக்கியத்தோடு தொடர்பு படுத்திப் படிக்க வேண்டுகிறேன். கொஞ்சம் தெளிவாகவே நான் சொல்லி இருந்திருக்கலாம்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...