A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

4 Aug 2012

A Suitable Boy - Vikram Seth

 Book Name: A Suitable Boy
Author         : Vikram Seth
Published Year: May 1993
Publisher: Harper Collins(US)/Phoenix (UK)

மூன்று வருடங்களுக்குமுன் நான் இருந்த வீட்டின் அருகில் ஒரு நூலகம்  இருந்தது.  சுஜாதாவின் புத்தகங்களில் பெரும்பாலானவற்றை நான் அப்போதுதான் படித்தேன். அவர் எழுதியிருந்த கட்டுரைகளில் ஒன்றில் விக்ரம் சேத்தின் ஆங்கிலக் கவிதைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.  நான் விக்ரம் சேத்தை இணையத்தில் தேடியபோதுதான் இப்படி ஒரு புத்தகம் இருப்பதாகத் தெரிந்து கொண்டேன். அடுத்த தடவை நான் புத்தகங்களை மாற்றிக் கொண்டுவரப் போனபோது அந்த லைப்ரரியின் மானேஜரிடம், "விக்ரம் சேதத்தின் "A Suitable Boy" இருக்கிறதா?" என்று கேட்டேன்.  அவர் என்னை சில நொடிகள் வெறித்துப் பார்த்தார். இவன் புத்தகத்தைத் திருப்பித் தருவான் என்ற நம்பிக்கை வந்தவராக பக்கத்தில் இருந்த ஷெல்பில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்தார். இப்போது நான் அந்தப் புத்தகத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் ஒருவாறாக என் உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு, "எனக்கு இந்தப் புத்தகத்தை ஒரு மாசத்துக்குக் கொடுப்பீங்களா?" என்று கேட்டேன்.  ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் வாசித்து எந்த ஒரு புத்தகத்தையும் சில நாட்களிலேயே முடித்துவிடுவதை அப்போதெல்லாம் நான் என் வழக்கமாக வைத்திருந்தேன். அப்படியிருந்தும் இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்க ஒரு மாதம் ஆனது. அதன் காரணம் கட்டுரையின் இறுதியில்.
         

இந்த நாவலின் கதைக்கருவை சில பத்திகளில் சொல்லிவிட முடியாது.  பதினெட்டு மாத கால நிகழ்வுகளை விவரிக்கும் மிக நீண்ட கதை இது. பதினெட்டு மாதங்களாக  ஒரு தாய் தன் மகளுக்குப் பொருத்தமான வரனைத் தேடிக் கொண்டிருக்கிறாள். கதைக்களம்  சுதந்திரத்துக்கு பிந்தைய இந்தியா, பாத்திரங்கள் உத்தர பிரதேசம், பிஹார், மேற்கு வங்க மாநிலங்களில் பயணிக்கின்றன. கதாநாயகி லதா சுதந்திரமாக சிந்திக்கக்கூடிய புதுமைப் பெண். அவள் மூன்று வரன்களில் ஒருவனைத் தேர்ந்தெடுக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறாள், யாரை இறுதியில்   திருமணம் செய்து கொள்கிறாள் என்பதுதான் கதையின் மையக் கேள்வி. இதைத் தவிர லதாவின் குடும்பம் மற்றும் வேறு மூன்று குடும்பங்களின் கதைகளும் இந்த நாவலில் விவரிக்கப்படுகின்றன.


 


கதையின் முக்கிய பாத்திரங்களைக் கொண்டு விக்ரம் சேத் இந்தியாவை அன்று அச்சுறுத்திய, இன்றும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினைகளை அற்புதமாகத் தன் நாவலினூடாகப் விவரிக்கின்றார். சாதி, ஜமீந்தார் அமைப்பு,  இந்து முஸ்லிம் வன்முறை போன்றவை நாவல் முழுதும் தொடர்ந்து பேசப்படுகிறது.

இந்த நாவல் முழுவதும் மெல்லிய நகைச்சுவை இழையோடியபடி இிருக்கும். 1950களின் துவக்ககால இந்தியா எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பற்றிய ஒரு அடிப்படை புரிதலை இந்த நாவல் அளிக்கிறது.  ஆதிக்க சாதியினருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் இடையே இருந்த உறவு, இந்து முஸ்லிம் உறவு, அக்கால வட இந்திய மக்களின் பண்பாடு, தங்களை வேகமாக விழுங்கிச் செல்லும் மாற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்ற அவர்களுடைய குழப்பங்கள் - இவையனைத்தும் நமக்கு இந்த நாவலில் தெரிய வருகிறது.

1450 பக்க அளவில் ஒரு மாபெரும் புத்தகம், உங்களுக்கு அத்தனை நேரம் இருந்தால், வாசிக்க முயற்சிக்கலாம்.

கிடைக்கும் இடம் : Murugan Lending Library, Gokul Arcade, Adyar, Chennai.

4 comments:

  1. எப்படிய்யா இவ்வளவு பெரிய புக்கெல்லாம் படிக்கறீங்க? ஏதாவது மிஷின் இருக்கா? இல்லாட்டி சுமால் வொண்டரில் வரும் விக்கி மாதிரி புக்கைத் புரட்டினால் மண்டையில் ஏறிவிடுமா?

    ReplyDelete
  2. Read 3 to 4 hours daily for one whole month, not even a single day i missed, sometimes felt why i am reading this, after completing the book, it was good, if you have plenty of time, you can try to read.

    ReplyDelete
  3. I also read it. It is a literature which is worth reading. the way it was written flows like water in the river, and very pleasant to read!!!

    ReplyDelete
  4. Thanks for the comments Mr.Ramesh, Its very nice to know, you too liked the book :-)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...