A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

18 Aug 2012

இரண்டாவது காதல் கதை -சுஜாதா



         புத்தகம் பெயர்             :        இரண்டாவது காதல் கதை
         ஆசிரியர்                        :        சுஜாதா
         வெளிவந்த இதழ்       :       ஆனந்த விகடன்.
      

                   "......அவன் போன திசையைச் சற்று நேரம் பார்த்தாள். எல்லாவற்றையும்  உதறிபோட்டுவிட்டு,  'அந்தாளை  கூப்பிடுய்யா' என்று விளித்து , அவனுடன்  லிஃப்ட்டில் முத்தமிட்டுக் கொண்டே இறங்கி அவன் ஸ்கூட்டர் பின்னால் ஏறிக்கொண்டு  கூந்தல் அலைய, ஆடைகள் கலைய... எங்கோ இலக்கில்லாமல் செல்லும் சினிமாத்தனமான விருப்பம் அவள் உள்ளத்தில் ஒரே ஒரு தடவை மின்னலடித்தது உடனே மறைந்துவிட்டது..." 
                                                                                                                     (நாவலில் ஒரு பகுதி)

       


      சுஜாதாவின் "இரண்டாவது காதல் கதை,   ஏழு-எட்டு வருஷம் முன்னாடி காலேஜ்  லீவுக்கு விழுப்புரத்தில் இருக்கிற சித்தி வீட்டுக்கு போயிருந்தபோது படிச்சது நம்பள மாதிரியே சித்தியும் சுஜாதாவோட விசிறி, 2000-01 ஆண்டுகளில் ஆனந்த  விகடன்  வார இதழ்ல தொடர்கதையா வெளிவந்து இருந்த  "இரண்டாவது காதல் கதை"யை, ஒவ்வொரு  இதழிலிருந்தும் தனியா பிரிச்சு ஒரு புத்தகமா பைண்டு பண்ணி வச்சு இருந்ததைப்  படிக்கக் குடுத்தாங்க. அப்படி படிச்சது தான் இந்தப் புத்தகம். இப்போ  படிக்கும்போதும் அதே அளவுக்கு ஃபிரெஷ்ஷா இருக்கு.

      நிவேதிதா (நிதி) அப்படிங்கற மேல்தட்டு / பணக்காரப் பெண்ணின் ஆறு மாதகால  வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், அவற்றைத் தொடர்ந்து அவள் எடுக்கும் முடிவுகள் அவள் குடும்ப வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகின்றன என்பதே கதை.  நிதியின் தந்தையான ஜெயந்த் தன்னுடைய கொள்கை/கருத்துகளைத் தனது மனைவி மற்றும்  மக்கள் மீது திணிப்பவர். இந்த நாவல் படிக்கும்போது கிட்டத்தட்ட ஒரு சினிமா  பார்க்கிற உணர்வு வந்திடும். எப்படினா , நல்லா போயிட்டு இருக்கிற நிதியோட  வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும் / ஏமாற்றங்களும் , சட்டென ஏற்படும்   தோல்வியும் அப்போது நிதி எடுக்கும் முடிவுகளும், பின்பு அவள் நல்ல நிலையை  அடைவதும் - சினிமா கதைதான்.
         


நாவலில் பிடித்த ரெண்டு மூணு இடங்கள்னா :  நிதி   Alzheimer பாதிக்கப்பட்டிருக்கும் பாட்டியுடன் பேசும் இடம். நிதியின் கணவன், "இது  என்னோட   குழந்தையான்னு சந்தேகமா இருக்குன்னு" கேட்க, பேசிக்கொண்டு இருக்கும்போதே சட்டென நிதி  கார் சிக்னலில்  நிற்கும்போது தலைமறைவாகும் இடம். நாவலின் இறுதியில் நிதியோட பழைய காதலனைச் சந்திக்கும் இடம், தனது தந்தையை டைரக்டர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு தான் அந்த இடத்தில் அமர்வது போன்ற இடங்கள்.

  சுஜாதாவோட இயல்பான  மொழி நடையும், நகைச்சுவை உணர்வும், மேல்தட்டு வர்க்கத்தின் பேச்சும் மொழியும், அவர்கள் வாழ்வின் அபத்தங்களும் சரளமாக வெளிப்படுகின்றன. லாஜிக் பார்க்காமல் படித்தால் நன்றாக இருக்கும். சுஜாதாவின்   இறுதி காலங்களில் வெளிவந்த சிறப்பான நாவல்



          For Hard copy click here,
          For Soft  copy click here

 

1 comment:

  1. பகிர்வுக்கு நன்றி ஐயா... (இணைப்பு கொடுத்ததற்கும்)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...