A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

15 Aug 2012

மகாத்மா காந்தி கொலை வழக்கு


ஆசிரியர் : என்.சொக்கன்.
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 255
விலை: Rs.135
இணையத்தில் வாங்க: கிழக்கு / உடுமலை

மொத்தம் ஏழு பேர். வெவ்வேறு ஊர் / சூழல் / மொழி. ஆனால் அனைவருக்கும் ஒரே நோக்கம். மகாத்மா காந்தியை கொலை செய்வது. அவர்கள் ஒவ்வொருவரின் பின்னணியையும், அவர்களின் நோக்கத்திற்கான காரணங்களோடு தனித்தனியாக விளக்கி, அவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதை சொல்லி, திட்டத்தை எப்படி நடத்தி முடிக்கிறார்கள் என்று துல்லியமாக தேதிவாரியாக விளக்குகிறார் ஆசிரியர்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் துவங்குகிறது பிரச்னை. அப்போதைய கலவரத்தில் புலம் பெயர்ந்தவர்களுக்கு / அவர்கள் உறவினர்களுக்கு காந்தியின் மேல் ஏற்பட்ட வெறுப்பு, கோபம் ஆகியவை கொலை செய்யும் அளவிற்கு போகிறது என்று துவங்கும் அத்தியாயம் முதல், இறுதிவரை பல பின்னல்கள், திருப்பங்கள் நிறைந்த வரலாற்றில், நமக்கு ஏற்கனவே முடிவு தெரிந்தாலும் ஒரு துப்பறியும் நாவல் போல் பரபரவென்று போகின்றது புத்தகம்.

கொலை செய்தாயிற்று. பிறகு அந்த கொலையாளிகள் என்ன ஆனார்கள்? அவர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது? யார் அவர்கள் மேல் வழக்கு தொடுத்து, குற்றத்தை நிரூபித்து தண்டனை பெற்றுக் கொடுத்தார்கள்? அந்த வழக்கு நடந்த சமயத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் - இவையும் புத்தகத்தில் விவரமாக உள்ளன.

காந்தியை சுட்டவர் கோட்ஸே, காந்தியை சுட்டவர் கோட்ஸே - என்ற வாக்கியத்தை மட்டும் மனப்பாடம் செய்து வந்தவர்களுக்கு, அந்தப் படுகொலைக்குப் பின்னால், எவ்வளவு பேர் இருக்கின்றனர், எவ்வளவு திட்டமிடல்கள் தேவைப்பட்டிருக்கின்றன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் குறையை தீர்க்க வந்ததே இந்த புத்தகம். பற்பல புத்தகங்களை படித்து, ஆதாரங்களை திரட்டி, நாம் படிப்பதற்கு மிகவும் எளிதாக காலஅட்டவணையுடன் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

ஜனவரி 30, 1948க்கு முன்னரே பல முறை கொலை முயற்சி நடந்ததாகவும், அப்பொழுதே அந்த கொலை முயற்சி செய்தவர்களை தேடிப் பிடித்திருந்தால், மகாத்மா காந்தி - இந்திய சுதந்தரத்திற்காக பாடுபட்டவர் - இந்தியாவின் தேசப்பிதா - இன்னும் சில காலம் வாழ்ந்திருப்பார் என்று தெரியவரும்போது ஒரு பெருமூச்சு மட்டுமே வருகிறது.

காந்திய வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

ஆம்னிபஸ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய சுதந்தர தின நல்வாழ்த்துகள்.

***

3 comments:

  1. என்னுடைய புத்தகத்தை அறிமுகம் / விமர்சனம் செய்தமைக்கு நன்றி சத்யா :)

    என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  2. பக்கக் கணக்கு தவறாக உள்ளதோ?

    ReplyDelete
  3. எனக்கு புத்தகம் படிக்கணும் போல ஆர்வமாக உள்ளது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...