A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

10 May 2013

Norwegian Wood- Haruki Murakami


Norwegian Wood
Haruki Murakami
Novel
Photo Courtesy/To Buy: Flipkart



ஆம்னிபஸ் குழும விவாதம் ஒன்றில் நடராஜன் ஹருகி முராகமி மற்றும் சிலரைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். அதனால் இந்தப் புத்தகத்தையும் என்னுடைய நூலக வரிசை அட்டையில் குறித்து வைத்திருந்தேன். 

இதற்கு முன் வேறு சில புத்தகங்கள் படித்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்தபோதும் இந்த புத்தகம்தான் வந்தது. சரி, வந்ததுதான் வந்தது, இதையே படிப்போம், என்று படிக்க ஆரம்பித்தேன். 

நாவலின் அட்டையில் ‘Murakami must already rank among the world’s greatest living novelists’- Guardian, என்றொரு வாசகம். இந்த புத்தகம் ஜே ரூபின் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இது சிறப்பான மொழிபெயர்ப்பா என்று என்னால் சொல்ல முடியாது, ஜப்பானிய, ஆங்கில மொழி தெரிந்த + இந்த நாவலை இரண்டு மொழிகளிலும் வாசித்தவர்களால்தான் சொல்ல முடியும், சரியா ? 


இந்த நாவல் படிக்க ஆரம்பிக்கும்போது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் படிக்க ஆரம்பித்தேன். ஹருகி முரகாமி பெயர்கூட கேள்விப்பட்டிராத பெயர். ஒரு சில மாதங்கள் ஜப்பானீஸ் மொழி கற்றுக் கொண்டதுதான் எனக்கும் ஜப்பானுக்கும் உள்ள தொடர்பு (அதுவும் அரைகுறைதான்). 

இது ஒரு முக்கோண காதல் கதை. வாதானபே (Toru Watanabe), நா-ஒ-கா (Naoka), மிதோரி (Midori). இங்கே கதையைக் கொஞ்சம் எழுதினால் போதும் என்று நினைக்கிறேன். அதனூடே கதையைப் பற்றியும் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். 

கதை நடக்கும் காலம் 1969-1970 ஆம் ஆண்டு. 1969-70 ஆண்டுகளில் ஜப்பானைக் கலக்கிய மாணவர் போராட்டங்கள், ஆங்கில பாப் பாடல்கள் நாவலின் பின்னணி. இதனூடே இந்த கதைமாந்தர்களின் மனக்குழப்பம், அவர்களின் Sexuality ஆகியவற்றைப் பேசுகிறது. மரணம் என்பது இந்நாவலின் இன்னொரு முக்கியமான திரி. Naoka மற்றும் வாதானபே நண்பன் கிசுகியின் மரணம் இருவரையும் வெகுவாக, அதேசமயம் இருவேறு விதமாக பாதிக்கிறது. வதானபேயை அது வாழ்க்கையில் பற்று இழக்கச் செய்து பெண்களையும், மதுவையும் நாடச் செய்த அதே வேளையில், அது naokaவின் மனநலனையும் பாதிக்கிறது. noaka மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். சில மாதங்கள் கழித்து தற்கொலை செய்து கொள்கிறார். 

மிதோரி என்ற பெண் இந்த சமயத்தில் வாதானபே வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். இவர் வாதானபே உடன் படிப்பவர். இவரின் குணநலன்கள் அப்படியே Naokaவுக்கு எதிரானவை. இவர் ரொம்ப குதூகலமானவர்.

இந்தக் கதை மாந்தரை தவிர நகசவா(Nagasawa)- ஹட்சுமி(Hatsumi) என்று இருவேறு துருவ கதாபாத்திரங்கள் அறிமுகபடுத்துகிறார். இந்த நாவலில் செக்ஸ் என்பது இயல்பாகக் காட்டப்பட்டுள்ளது.  நகசவா பெண்களைத் தேடி அலையும் மிக புத்திசாலியான கதாபாத்திரம். ஹட்சுமி அவனுடைய பெண் நண்பர்((Girl Friend). Hatsumiயை தன பெண் நண்பர் என்று சொல்லும் அதே வேளையில், அவளைத் திருமணம் செய்யும் எண்ணம் சிறிது கூட இல்லாதவர். இவர் வாதானபே படிக்கும் புத்தகம் பார்த்து நண்பர் ஆகிறார். வாதானபேக்கு நகசவா செய்யும் சில காரியங்கள் பிடிக்காமல் போனாலும், அவரை நோக்கி இழுக்கப்படுகிறார். கடைசியில் ஹட்சுமியும் தற்கொலை செய்துகொண்டு இறந்து போகிறார்.

Naoka மேல் தீவிர காதல் கொண்டு இருக்கும் வாதானபே, அவள் குணமான பின் அவளை திருமணம் செய்ய எண்ணுகிறார். ஆனால் அவளின் மனநலம் சில சமயம் மேலும் சீர்கேடு அடைகிறது, வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அந்த சமயத்தில் மிதோரி தன்னுடைய காதலை வாதானபேயிடம் தெரிவிக்கிறார். வாதானபே அதனை அங்கீகரிக்கிறார். திடீரென naokaயின் மரணம் வாதானபேயை நிலைகுலையச் செய்கிறது, யாரிடமும் சொல்லாமல் ஊர் ஊராகச் சுற்றுகிறார். கடைசியில் naokaவின் மருத்துவமனை நண்பர் இஷிடா அறிவரை பேரில் மிதோரிக்கு தொலைப்பேசி செய்வதுடன் நாவல் முடிகிறது.

நாவலின் (மொழிபெயர்க்கப்பட்ட) சிறப்பு, எளிமையான மொழிநடை, தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை கிடையாது. தொலைந்து போன இருபது வயது adolescent வாழ்க்கையை உன்னிப்பாக பதிவு செய்து இருக்கிறார். நாவல் முழுவதும் வாதானபே சொல்வது போல வருகிறது, மொத்த நாவலும் வாதானபே ஒரு விமானத்திலிருந்து இறங்கும்போதும், Beatles குழுவின்  “Norwegian wood” பாடலைக் கேட்கும்போதும் மனம் அழுத்தம் ஏற்பட்டு நினைத்துப் பார்ப்பதாக வருகிறது. 

இந்த பாடல் Naokaக்கு மிக பிடித்த பாடல். அதுவே நாவலின் தலைப்பு. முன்னமே சொன்ன மாதிரி ரொம்ப நிறைய செக்ஸ் சீன்கள், நிறைய சோகம், அதை நாமும் உணர்கிற மாதிரி எழுத்து. நாவல் முழுவதும் மிகச் சில சம்பவங்களால் ஆனது என்று தோன்றினாலும், 1969-70 ஜப்பான் எப்படி இருந்தது என்று கண் முன் நிறுத்துகிறார்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...